Try GOLD - Free
துணைவேந்தர் நியமன சட்டத் திருத்தத்துக்கு தடை
Dinamani Madurai
|May 22, 2025
உயர்நீதிமன்றம் உத்தரவு
-
சென்னை, மே 21: தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றி இயற்றப்பட்ட சட்டப் பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்த மசோதாவுக்கு உச்சநீதி மன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.
இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம், பிரதான மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்காலத் தடை கோரிய மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தது.
இதன்படி, இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் திருத்தச் சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 10 பல்கலைக்கழகங்களில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்க மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
This story is from the May 22, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
கடந்த சில மாதங்களாக தமிழர் நாம் அனைவரும் அரசியல் பற்றியே சிந்தித்தும், விவாதித்துக் கொண்டும் இருக்கிறோம். இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு அரசியல், புதிய அரசு என்றுதான் பேசப் போகிறோம்.
3 mins
May 16, 2026
Dinamani Madurai
தேர்தல் நடைமுறைகள் நிறைவு: காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்
தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் மற்றும் மின்னணு இயந்திரங்களை காப்பறையில் வைத்திருப்பதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
1 min
May 16, 2026
Dinamani Madurai
ஆசிய யு-17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 17 பதக்கங்கள்
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு15, யு17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min
May 16, 2026
Dinamani Madurai
வெளிநாட்டுப் பயண விவரங்களை ராகுல் தெரிவிக்க வேண்டும்
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எச்சரிக்கை
1 mins
May 16, 2026
Dinamani Madurai
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Madurai
வான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்
இந்திய விமானப் படை தலைமைத் தளபதி
1 min
May 16, 2026
Dinamani Madurai
தங்கப் பணமாக்கல் திட்டம்: பிரதமர் அழைப்புக்கு மலபார் கோல்ட் ஆதரவு
இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில், வீடுகளில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்புக்கு ‘மலபார் கோல்ட்' தங்கநகை விற்பனை நிறுவனம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
1 min
May 16, 2026
Dinamani Madurai
வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.
1 min
May 16, 2026
Dinamani Madurai
மேற்காசிய அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி உறுதி
1 mins
May 16, 2026
Dinamani Madurai
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் குழந்தைகள் புகார்களைக் கையாள வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவு
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காவது உள்ளிட்ட புகார்களைக் கையாளும் அதிகாரிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என தமிழக தலைமைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
2 mins
May 16, 2026
Translate
Change font size
