Try GOLD - Free
அரசியல்... அன்றும் இன்றும்!
Dinamani Madurai
|March 15, 2025
இன்றைய அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை. மக்களிடம் போவதும் இல்லை; மக்களை மதிப்பதும் இல்லை; தேடிவரும் மக்களைச் சந்திப்பதும் இல்லை. மக்களின் வாக்குகளைப் பெறுவதே இவர்களின் நோக்கமாகும்.
ந்திய நாட்டின் அரசியல் என்பது சுதந்திரப் போராட்டத்திலிருந்து தொடங்குகிறது. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, மலேயா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பிடித்து ஆளத் தொடங்கியிருந்தனர். அப்போது இந்தியா ஒன்றாக இல்லை. 56 தேசங்களாகப் பிரிந்து கிடந்தது. வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியர்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி, அவர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கினர். குறுநில மன்னர்களும், நிலக்கிழார்களும், ஜமீன்தார்களும் எளிதாக ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த காந்தியார் ஆங்கிலேயரின் அடக்குமுறைகளைக் கண்டு வெகுண்டெழுந்தார். தாய்நாட்டைக் காக்க இளைஞர்களை அறைகூவி அழைத்தார். அவரது அகிம்சைக் கொள்கையால் கவரப்பட்டு இளைஞர்களும் தம் உடல், பொருள், உயிரை அர்ப்பணித்திட அவர் பின் திரண்டனர்.
இதே காலகட்டத்தில் தீவிரவாத இளைஞர்கள் வன்முறைகளில் இறங்கினர். வெள்ளையர்கள் நடத்திய நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், ஆஷ் துரையைச் சுட்டு வீழ்த்திய வாஞ்சிநாதன், கொடிகாத்த குமரன் இவர்களைப் போன்று எண்ணற்ற இளைஞர்களைக் கூறலாம். இவர்களுடைய நோக்கம் பணம், பதவி இல்லை. தேசத்தை விடுவிப்பதே நோக்கமாக இருந்தது. அதற்காக எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருந்தனர்.
இன்று அரசியல் எப்படி இருக்கிறது? எங்கே சென்றால் பணமும், பதவியும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு கட்சியில் சேர்கிறார்கள். அல்லது கட்சியைத் தொடங்குகின்றனர். கட்சியைத் தொடங்கும் போதே முதலமைச்சர் நாற்காலியைத் தவிர, வேறு எதுவும் கண்ணுக்குத் தெரிவது இல்லை.
அந்தக் காலத்தில் மக்களுக்குச் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தனர். மக்களிடம் சென்று, மக்களிடம் கற்றுக் கொண்டு, மக்களுக்குப் பணியாற்றுவதே அரசியல் என்று அரசியல் விற்பன்னர்கள் கூறினர். இப்போது அதையெல்லாம் எடுத்துக் கூற யாரும் இல்லை. சொன்னாலும் கேட்பதற்கு எவரும் இல்லை.
This story is from the March 15, 2025 edition of Dinamani Madurai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Madurai
Dinamani Madurai
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Madurai
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
1 min
June 28, 2026
Dinamani Madurai
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Madurai
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Madurai
ராமர் கோயில் நன்கொடை விவகாரம்; அறக்கட்டளை பொதுச் செயலர், அறங்காவலர் ராஜினாமா
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்துக்கு தார்மிகப் பொறுப்பேற்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததாக அந்த அறக்கட்டளை சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
June 28, 2026
Dinamani Madurai
பொது இடங்களில் ஜாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கான இடைக்காலத் தடை நீட்டிப்பு
பொது இடங்களில் ஜாதி பெயர்களை நீக்குவது தொடர் பாக வெளியிடப்பட்ட அரசா ணைக்கு தடை விதிக்கக் கோரிய வழக் கில், அரசாணையின் செயலாக்கத் துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
June 28, 2026
Dinamani Madurai
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Madurai
அமெரிக்கா-ஈரான் மீண்டும் மோதல்
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தாக்கப்பட்ட விவகாரத்தால் பதற்றம்
1 min
June 28, 2026
Dinamani Madurai
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Madurai
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
