Try GOLD - Free
சமுதாய நோக்கில் பாவைப் பாசுரங்கள்
Dinamani Kanyakumari
|December 28, 2025
இறைவனை வணங்கச் சென்ற அடியார்கள் நோன்பு நோற்று, இறைவனுடைய இன்னரு ளைப்பெற முயன்றனர்.
சமுதாயத்தோடு ஒன்றிய வாழ்வாகவே சமய வாழ்வு அமைந்தது. நோன்பு நோற்பதன் மூலம் சமுதாயத்தை வளம் பெறச் செய்ய இயலும் என்ற நம்பிக்கையும் மக்கள் மன தில்வேரூன்றியிருந்தது. நீரின்றி அமையாதன்றோ உலகம்? "கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே" என்று தொல்காப்பியம் புறத்திணையியல் கூறுகிறது.வள்ளுவரும் தம்முடைய குறளில் கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து "வான் சிறப்பு" எனும் அதிகாரத்தைவகுத்துள்ளார். தம்முடைய நோன் பினால் மாதம் மும்மாரி பொழியும் எனும் தெளி வும் மக்களிடையே காணப்பட்டது. இதனை நன்கு உணர்ந்தே ஆண்டாளும் தம்முடைய திருப்பாவையில், "நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாறி பெய்து" எனப் பாடுகிறார்.
பொதுவாகக் கோயிலுக்குச் செல்வோர் வெறுங்கையுடன் செல்லார். மிகத் தூய்மையா கக் குளித்துவிட்டு, தம் கையில் மலர்களை ஏந் திக் கொண்டு, கோயிலுக்குச் செல்வர். "தூயோ மோய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது" என்று ஆண்டாள் தம்முடைய திருப்பாவையில் குறிப்பிடுவார். இறை வழிபாடு மூன்று வேளை களில் நடைபெற்றதை "நாச்சியார் திருமொழி" நன்கு விளக்குகிறது.
"தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுதேத்துகின்றேன்" என்று கோதை நாச்சியார் பாடுவார்.
இங்ஙனம் நடைபெற்ற இறைவழிபாட்டில் சங்கு ஊதுதலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந் தது. சங்க காலத்தில் நேரத்தைக் குறிப்பதற்கு, குறிப்பாக முன்னிரவு கழிந்து நள்ளிரவு வந்ததை அறிவிக்கும் வகையில் சங்கு ஊதப்பட்டது. அர சனைத் துயிலெழுப்ப வலம்புரிச் சங்குகள் அதி காலையில் அரண்மனையில் முழங்கியதைச் சங் கப் பாடல்கள்வழி அறியலாம். சிலப்பதிகாரத் திலும் இதே கருத்தைக் காண முடிகிறது. மணி மேகலையில், "வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப" என்று வருகிறது.
This story is from the December 28, 2025 edition of Dinamani Kanyakumari.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
குருவாயூர் - சென்னை இடையே ரயில்கள் நிலையங்கள் மாற்றி இயக்கம்
குருவாயூர் - சென்னை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் வரும் மே 27 முதல் 29- ஆம் தேதி வரை 3 நாள்கள் வழக்கமான பாதையில் செல்லாமல் மாற்றி இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
திரைப்படக் கல்வியின் அவசியம்
மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?
3 mins
May 18, 2026
Dinamani Kanyakumari
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Kanyakumari
நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Kanyakumari
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்
கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!
சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Dinamani Kanyakumari
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
1 min
May 18, 2026
Listen
Translate
Change font size
