Try GOLD - Free
இரு நாடுகளுக்கும் இழப்பு!
Dinamani Kanyakumari
|September 26, 2025
ஹெச்-1பி விசா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு புதிய விண்ணப்பதாரரும் அமெரிக்க அரசுக்கு ஒரு லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம் ரூபாய்) செலுத்த வேண்டி உள்ளது. இது ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர், இன்னொரு ஜனநாயக நாடான இந்தியாவை நசுக்குகிற முயற்சியாகும்.
அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு அளப்பரியது. அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாகும். இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவின் மக்கள்தொகையில் சுமார் 1.5% மட்டுமே இருந்தபோதிலும், அந்த நாட்டின் வளர்ச்சிக்காக தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் அறிவியல் துறைகளில் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, பல இந்திய அமெரிக்கர்கள் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்களில் யூனிகான்களை உருவாக்குவதிலும், தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர்.
தொழில்நுட்பத் துறையில் பல அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய வம்சாவளியினரின் தலைமுறையின் கீழ் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. 'சிலிகான் வேலி' போன்ற பகுதிகளில் புதிய வணிகங்களை ஏற்படுத்துவதிலும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. அறிவியல், ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வித் துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. பல இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு, குறிப்பாக துணிச்சலான மூலதனம் மற்றும் புதுமைகளை உருவாக்குவதன் மூலம் வலுச் சேர்க்கின்றனர்.
இந்த நிலையில், ஹெச்-1பி விசா கட்டண உயர்வு இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் இழைக்கப்படுகிற மிகப் பெரிய துரோகமாகும். டிரம்ப்பின் இந்த உத்தரவு அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவோடு இருக்கிற இந்தியர்களுக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்த இந்த ஹெச்-1பி விசா கட்டண உயர்வு குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை, 'புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு இது ஒரு முறை தானே தவிர, ஆண்டுதோறும் அல்ல' என்று விளக்கம் அளித்துள்ளது. ஏற்கெனவே, ஹெச்1-பிவிசாவை வைத்திருந்து தற்போது அமெரிக்காவுக்கு வெளியில் இருப்பவர்கள், நாடு திரும்பும் போது ஒரு லட்சம் டாலர் திரும்பச் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளது.
This story is from the September 26, 2025 edition of Dinamani Kanyakumari.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Kanyakumari
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Kanyakumari
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Translate
Change font size
