Try GOLD - Free
கவனம் சிதறக் கூடாது!
Dinamani Erode & Ooty
|March 17, 2025
மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவர் பெறுகின்ற கல்வியறிவும், வளர்த்துக்கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிர்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.
மாணவப்பருவத்தினர் வன்முறையில் நாட்டம் கொள்வது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, சாதி, சமயங்களின் அடிப்படையில் விருப்பு வெறுப்பைக் காட்டுவது, உள்ளூர் உலக அரசியல் விவகாரங்களில் தேவையற்ற ஆர்வத்தை வெளிப்படுத்துவது ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.
‘இளம் கன்று பயம் அறியாது’ என்பதற்கேற்ப, நெறியற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கான வேட்கையும் வேகமும் மாணவப் பருவத்தில் உருவாவது இயற்கையே. ஆனால், எதிர்கால முன்னேற்றம் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே நினைவில் வைத்து நெறியற்ற நடவடிக்கைகளை நாடாமல் இருக்கப் பழக வேண்டும்.
தனியொரு மாணவன் நல்லவனாகவே இருப்பான். ஆனால், பல மாணவர்கள் ஒன்று கூடினால் மோசமானவர்களாக நடந்து கொள்வார்கள் என்று பொருள்படும் ஆங்கிலப் பழமொழியை நிரூபிப்பது போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடும் வேளைகளில் எத்தகைய அத்துமீறல்களிலும் ஈடுபடுகின்ற தைரியம் அவர்களுக்கு உருவாகிவிடுகின்றது. அதன் வெளிப்பாடாகவே நீண்ட காலமாகத் தொடரும் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்குகின்றன.
ஒரே கல்லூரி அல்லது பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது, தாங்கள் பயிலும் கல்லூரி தவிர்த்த இதர கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை வம்புக்கு இழுப்பது, பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் கூட்டமாக ஏறி ரகளை செய்வது, கல்வீசுவது, பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுவெளிகளில் திரிவது ஆகிய செயல்களில் ஈடுபடும் மாணவர்களால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது.
This story is from the March 17, 2025 edition of Dinamani Erode & Ooty.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
தமிழர் மேன்மைக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் கருணாநிதி
தமிழ் மக்களின் மேன்மைக்காகவும், சமூக நீதிக்காகவும், விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டினார்.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்த ஷ்னெய்டர்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, தொடரை 2-1 என கைப்பற்றியது.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
மாநிலங்களவை இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்கியது தவெக
தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடத்தை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக தவெக தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் அறிவித்தார்.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
தமிழகத்தில் 2029-இல் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
வ.வே.சு. அய்யர் நினைவு தினம்: குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி
சுதந்திரப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான வ.வே.சு. அய்யரின் நினைவு தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பரிந்துரை
2 mins
June 04, 2026
Dinamani Erode & Ooty
2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பத்துரையின் வெற்றி செல்லாது
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பத்துரையின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 mins
June 04, 2026
Dinamani Erode & Ooty
இலங்கை மாணவர்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகை
இலங்கை பல்கலைக்கழகங்களில் படிப்பில் சிறந்து விளங்கும் பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவு மாணவர்களுக்கு இந்தியா சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
1 min
June 04, 2026
Dinamani Erode & Ooty
'ஒபெக்'கிலிருந்து அமீரகம் வெளியேறியது ஏன்?
ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் 'ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
June 04, 2026
Translate
Change font size
