Try GOLD - Free
இல்லறத்தின் எதிர்காலம்
Dinamani Dindigul & Theni
|December 31, 2025
ஒரு விமான நிலையக் காத்திருப்பு அறையில் பிரமுகர் இருவர் சந்தித்துக்கொண்டனர்; பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின்னர், பயண நோக்கங்கள் குறித்துப் பேசினர்.
'நடைபெறும் திருமண நிகழ்வுக்குச் செல்லும் வேலையோடு நடந்து முடிந்த திருமண வீட்டுக்கும் செல்ல வேண்டியதிருக்கிறது' என்று சொன்னவரிடம் கேட்டவர் சொன்னார்; 'எதற்கும் தெரிந்து கொண்டு செல்லுங்கள்'.சற்றே குழப்பமாய்ப் பார்த்தார் சொன்னவர். கேட்டவர் விளக்கம் சொன்னார்; 'முன்னே மாதிரி இப்போது இல்லை. அண்மையில் திருமணம் முடிந்த வீட்டுக்கு நல விசாரிப்புக்குச் சென்றிருந்தேன். அவர்கள் கேட்டார்கள் தெரிந்துகொண்டுதான் வந்தீர்களா என்று'. என்னவென்று விசாரித்ததால், திருமணம் முடிந்த மூன்று நாள்களுக்குள்ளே மணமுறிவு வந்து மணமக்கள் பிரிந்துவிட்டார்கள். அது தெரிந்துதான் விசாரிக்க வந்திருக்கிறீர்களா?' என்று கேட்டிருக்கிறார்கள். அதுமாதிரி, திருமணமான மணமக்கள் இப்போது ஒன்றாக இருக்கிறார்களா, நன்றாக இருக்கிறார்களா? என்று தெரிந்துகொண்டு போனால் நல்லது.
விமானத்துக்கான அறிவிப்பு வந்ததும் அவர்கள் சென்று விட்டார்கள். அந்த உரையாடல் மேலும் பல நினைவலைகளை என்னுள் எழுப்பியது.
முன்பெல்லாம் எந்தவிதக் கருத்து முரண்கள் வந்தாலும் உறவுக்காக, பிள்ளைகளுக்காக, உலகத்தவர்க்காக, சரிசெய்து கொண்டு வாழும் நிலை இருந்தது. 'ஒன்றன் கூறாடை உடுப்பாரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையேவாழ்க்கை' என்று கலித்தொகை அன்பில் விளைந்த அறம் மலிந்த வாழ்க்கை அனுபவத்தை அழகாகப் பாடியிருக்கிறது (பாலைக்கலி-18). மரணம் கூடப் பிரிக்கக் கூடாது என்ற மன உறுதி கொண்டு வாழ்ந்த லட்சியத் தம்பதிகளையும் வரலாறு கண்டிருக்கிறது.
'பிறந்த வீட்டில், தேனும் பாலும் கலந்து உண்ட வசதிமிகு வாழ்க்கை இருந்தது உண்மைதான். ஆனால், தான் வாழப் புகுந்த வீட்டில், மானும் ஏனைய விலங்குகளும் கலக்கி உண்டு எஞ்சிய, இலை தழைவீழ்ந்து கலங்கிய நீர் அதைவிடவும் சுவை மலிந்தது' என்று தலைவி சொல்லும் அளவுக்கு அவர்மேல் கொண்ட அன்பின் பெருக்கத்தைக் கபிலரும் பாடியிருக்கிறார். (ஐங்குறு நூறு-203)
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு (குறள்-60) என்கிறார் திருவள்ளுவர்.
This story is from the December 31, 2025 edition of Dinamani Dindigul & Theni.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடரும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது
மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் தொடரும் என்று முதல்வர் விஜய் அறித்துள்ளது வரவேற்கத்தக்கது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
May 15, 2026
Dinamani Dindigul & Theni
தாலி பாக்கியம் தரும் தலம்!
தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.
1 mins
May 15, 2026
Dinamani Dindigul & Theni
குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்
இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.
1 mins
May 15, 2026
Dinamani Dindigul & Theni
தாத்தா, பாட்டி கொன்று எரிப்பு: பேரன் கைது
மன்னார்குடி அருகே மது போதையில் தாத்தா, பாட்டியை அடித்துக் கொன்று, தீ வைத்து எரித்த பேரனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
May 15, 2026
Dinamani Dindigul & Theni
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Dindigul & Theni
உயர்வுக்கான பாதை உயர் கல்வி !
இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.
2 mins
May 15, 2026
Dinamani Dindigul & Theni
ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
2 mins
May 15, 2026
Dinamani Dindigul & Theni
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Dindigul & Theni
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Dindigul & Theni
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை உச்சநீதிமன்றம்
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை; ஒருவர் ஹிந்துவாக இருப்பதற்கு கோயிலுக்கு செல்வதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ கட்டாயமல்ல; வீட்டில் ஒரு விளக்கை ஏற்றுவதுகூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
1 min
May 14, 2026
Listen
Translate
Change font size
