Try GOLD - Free
தாகூரைப் போற்றும் கொரியர்கள்...
Dinamani Cuddalore
|May 11, 2025
லகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.
பழைய பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்த ஆதாரங்களைப் புரட்டிப் பார்த்தால், இந்தியாவும், கொரியாவும் தொடர்புடைய செய்திகள் நிறையவே தெரியவருகின்றன.
முதல் நூற்றாண்டில் காயா வம்சத்தைச் சேர்ந்த 'கிம்- சுரோ' என்ற அரசன் இந்தியாவில் உள்ள அயோத்தியைச் சேர்ந்த ராஜகுமாரியை மணம் செய்தாராம். இதை நம்புவதானால், புராணக்காலத்தில் இரு நாடுகளுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்பதையும் ஏற்க வேண்டும். இதுதவிர, புத்த மதமும் இரு நாடுகளையும் இணைக்கும் சக்தியாக இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய இலக்கியமும் கலாசாரமும், குறிப்பாக கவி ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துகள் எல்லாம் இந்திய ஆன்மிகம், கலாசாரம், சிந்தனை, கலை, பண்பாடுகள் எல்லாவற்றின் மொத்தப் பிரதிநிதியாக தாகூரை கொரியர்கள் பலர் ஏற்றுகொண்டிருக்கின்றனர். அவருடைய மனித நேய உணர்வும், நியாய உணர்வும் அவருக்குப் பல நண்பர்களை உலகில் உருவாக்கிக் கொடுத்துள்ளன. முதற்படிப்பவரையும் அவரைப் போலவே, அவரது எழுத்துகள் மனதைத் தொடும்.
ஏதேச்சதிகாரத்துக்கு எதிரான போக்கை ஆதரிப்பவர் தாகூர். தம்முடைய சக்தி மிகுந்த கவிதைகளால் ஏதேச்சதிகாரத்துக்கு எதிராக மனிதக் குலத்தைத் தூண்டிவிட்டார்.
This story is from the May 11, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Cuddalore
அரசு மரியாதையுடன் இயக்குநர் கே.பாக்யராஜ் உடல் தகனம்
சென்னையில் மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
1 min
June 29, 2026
Dinamani Cuddalore
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Cuddalore
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Cuddalore
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது
பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Cuddalore
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Cuddalore
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Cuddalore
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Translate
Change font size
