Try GOLD - Free
கடன் கொடுமைகளுக்கு கடிவாளம்!
Dinamani Cuddalore
|April 29, 2025
அனைவரையும் கடனாளியாக்குவது என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று. சுலபத் தவணைகள் என்று ஆசைகாட்டி கடனாளியாக்குவதும், அதைத் திருப்பித் தரமுடியாமல் போகும்போது வாடிக்கையாளர்களை பல்வேறு வகைகளில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் கடைசியில் அவர்களது சொத்துகள், சேமிப்புகளை சட்டப்படி அபகரித்துக் கொள்வதும் வாடிக்கையாகவே மாறி இருக்கின்றன.
-
கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளைக் காட்டினால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதா தமிழக பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதிக வட்டியிலிருந்து மக்களைக் காக்கும் வகையில், தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக் கடன் வழங்குபவர்கள் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவை ஏற்கெனவே அமலில் இருந்தாலும் இப்போது கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் மிகவும் அவசியமான ஒன்று.
தென்காசி அருகேயுள்ள காசிதர்மத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை காரணமாக இவர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் 2017, அக்டோபர் மாதம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டி பிரச்னை மீதான பரவலான கவனத்தை இந்தச் சம்பவம் ஈர்த்தது என்றாலும், அதன் பிறகும் இது போன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.
அரசுப் பள்ளி ஆசிரியர்களான விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த தம்பதி லிங்கம், பழனியம்மாள். இவர்கள் கடன் தொல்லையால் கடந்த ஆண்டு மே 22-ஆம் தேதி தங்கள் மகன், மகள், இரு மாதக் குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
This story is from the April 29, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
எதனால் ‘எத்தனால்’?
அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.
3 mins
May 05, 2026
Dinamani Cuddalore
ஆன்டனெலிக்கு 'ஹாட்ரிக்'
ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில், நடப்பு சீசனின் 4-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் ப்ரீயில், இத்தாலி வீரரும், மெர்சிடஸ் டிரைவருமான கிமி ஆன்டனெலி வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
சீமான் அதிர்ச்சித் தோல்வி: 4- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சீமான் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி
திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 27 ஆயிரத்து 416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
மேற்கு வங்கம்: பாலியல் கொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் வெற்றி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர். ஜி. கர் அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் தாயார் ரத்னா தேவ்நாத் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட நிலையில் வெற்றிபெற்றார்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி
கொளத்தூர் தொகு தியில் நான்காவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் மு. க. ஸ்டா லின் தோல்வியடைந்தார்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
20 சதவீதமாகக் குறைந்த அதிமுக வாக்கு வங்கி
அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக அக்கட்சியின் வாக்கு குறைந்துள்ளது.
1 mins
May 05, 2026
Dinamani Cuddalore
இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்பட 7 மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி
சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.
1 min
May 05, 2026
Dinamani Cuddalore
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்
அஸ்ஸாமில் மீண்டும் பாஜக
1 mins
May 05, 2026
Translate
Change font size
