Try GOLD - Free
அறிவின் அமுதூற்று ‘நூலகம்’!
Dinamani Chennai
|August 12, 2025
மக்களைக் கொன்றால் ஒரு தலைமுறையைத்தான் அழிக்க முடியும்; அதேநேரத்தில், நூலகங்களை அழித்தால் ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிட முடியும். அதைத்தான் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் செய்தார்கள்.
இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தேசிய நூலக தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பொதுவாக, ஒரு நாட்டின் நூலக வளர்ச்சியைக் கொண்டே அந்த நாட்டின் அறிவுச் செழுமை அளவிடப்படுகிறது. இந்தியாவில் தற்போது எங்கெங்கும் தேர்வுப் பயிற்சிக் களங்களும், உயர் பதவி தேர்வுக்கூடங்களும் பரவியிருக்கின்றன. அந்த மாணவர்களுக்கு விருந்தோம்புகைகளாக நூலகங்கள்தான் மிளிர் கின்றன. எங்கள் நூலகத்தை எந்த நேரமும் நாங்கள் மூடுவதில்லை என்று அறிவிக்கும் நூலகங்கள் வளர்ந்து வருகின்றன.
நடமாடும் நூலகங்கள் வீதி முனைகளில் நிற்பதெல்லாம் நமக்குப் பெருமையாக இருக்கிறது. நூலக விழாக்கள், நூலக இதழ்கள் பெருகி வருகின்றன. புத்தகங்கள் படிப்பது மூளைக்கு நலமளிக்கக்கூடிய ஒன்று. புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கும், அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ளவும், சவால்களை எதிர்கொள்வதற்கும், எழுத்தாளராக உருவாகவும், வெளிப்படையான அறிவார்ந்த உரையாடல்கள் நடத்தவும் புத்தகங்கள் படிப்பது அவசியமாகிறது.
கி.மு. 300-ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் அருமை-பெருமைகளைக் கேட்டு வியந்த மாவீரன் அலெக்சாண்டர், எகிப்தின் எழிலில் மயங்கி ‘அலெக்சாண்டிரியா’ என்ற நகரை உருவாக்கினார். அங்குதான் மிகப் பெரிய நூலகத்தை எழுப்பினார். உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களை எல்லாம் திரட்டி 10 லட்சம் புத்தகங்களை அந்த நூலகத்தில் வைத்தார்.
அந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காகவே உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் அலெக்சாண்டிரியாவுக்கு வந்தனர். அங்கிருந்துதான் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் தத்துவங்கள், விஞ்ஞானம், அளவையியல், புவியியல், சமய தத்துவார்த்தங்கள் பரவத் தொடங்கின.
எகிப்தியர்கள் பாப்பிரஸ் (தருப்பை) புல்லில் தயாரிக்கப்பட்ட ஏடுகளில் எழுதி அலெக்சாண்டிரியாவில் இருந்த நூலகத்தில் சேமித்து வைத்திருந்தனர். ரோமானியர்களில் புகழ்வாய்ந்த ஜூலியஸ் சீசர், ரோம் நாட்டில் வாழ்ந்த வசதியானவர்களிடம் நன்கொடை வாங்கி பொது நூலகங்களை அமைத்தார். கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இப்படி 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்தன.
This story is from the August 12, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் மீது குற்றச்சாட்டு
1 mins
June 01, 2026
Dinamani Chennai
கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி, பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
June 01, 2026
Dinamani Chennai
வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவு
1 min
June 01, 2026
Dinamani Chennai
ஜவ்வாது மலையில் பழங்காலக் கோயில் கண்டெடுப்பு
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் பழங்காலக் கோயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
கோடை விடுமுறை நிறைவு: விமானக் கட்டணம் கடும் உயர்வு
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், விமானக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
மணிப்பூரில் களமிறங்கும் 'கோப்ரா' கமாண்டோக்கள்: மத்திய அரசு அதிரடி
இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) 'கோப்ரா' கமாண்டோக்களைப் பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
சோழர் கால செப்பேடுகள் தமிழ் சமூகத்துக்கு பெருமை
புகழ்பெற்ற சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்திடம் இருந்து இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணமாகும்; குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகம் பெருமிதத்தில் திளைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2 mins
June 01, 2026
Dinamani Chennai
திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை மயிலாடுதுறையில் மீட்பு
தம்பதி உள்பட 5 பேர் கைது
1 min
June 01, 2026
Dinamani Chennai
மன்னிப்புக் கோரினார் மத்திய அமைச்சர்
ஜாதிய சர்ச்சை பேச்சு
1 min
June 01, 2026
Dinamani Chennai
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
1 min
June 01, 2026
Translate
Change font size
