Try GOLD - Free
சென்னை தரமணி தமிழரசு இதழ் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்
DINACHEITHI - NAGAI
|May 13, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (12.05.2025) சென்னை, தரமணியில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறையின் 'தமிழரசு' அலுவலகம் மற்றும் அச்சக வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவாக, ரூ.25 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்" மற்றும் "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மார்பளவுச்சிலை" ஆகியவற்றைமாண்புமிகுதமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித்துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் முன்னிலையில் திறந்துவைத்தார்.
-
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் தொடங்கப்பட்ட 'தமிழரசு' இதழானது கடந்த 55 ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் தொகுத்து வழங்கி, அரசின் அச்சு ஊடகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் படித்துப் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள், கள ஆய்வுகள், அவை தொடர்பான செய்தி வெளியீடுகள், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், பிற பொதுவான தகவல்கள் அடங்கிய மாத இதழாக 'தமிழரசு' இதழ் தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள், சட்டமன்ற உரைகள், சட்ட மன்றத்தில் விதி 110 இன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொன்மொழிகள் போன்ற சிறப்பு வெளியீடுகளும், நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் தமிழ்ச் சான்றோர்களைப் போற்றும் விதமாகப் பல சிறப்பு மலர்களும் ‘தமிழரசு' இதழ் வாயிலாக வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த நான்காண்டுகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள 54 சிறப்பு வெளியீடுகளில் 19 சிறப்பு மலர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு. க. ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
This story is from the May 13, 2025 edition of DINACHEITHI - NAGAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.
1 min
April 11, 2026
DINACHEITHI - NAGAI
தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்
வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை
1 min
April 11, 2026
DINACHEITHI - NAGAI
கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
1 min
April 10, 2026
DINACHEITHI - NAGAI
புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ
அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - NAGAI
கேரளா -77.3 சதவீதம் அசாம் - 85.1 சதவீதம் பதிவு
அசாம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்தது.
1 min
April 10, 2026
DINACHEITHI - NAGAI
புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் இன்று நடக்கிறது.
1 mins
April 09, 2026
DINACHEITHI - NAGAI
மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள்: வாழப்பாடியில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
வாழப்பாடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார்.
1 min
April 08, 2026
DINACHEITHI - NAGAI
விஜய், சீமான் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மனுக்கள் ஏற்பு
9-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது
1 min
April 08, 2026
DINACHEITHI - NAGAI
‘டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் புதுச்சேரி இயக்கப்படுகிறது’
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
1 mins
April 08, 2026
DINACHEITHI - NAGAI
பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?
மு.க.ஸ்டாலின் கண்டனம்
1 min
April 08, 2026
Translate
Change font size
