Essayer OR - Gratuit
சென்னை தரமணி தமிழரசு இதழ் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்
DINACHEITHI - NAGAI
|May 13, 2025
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (12.05.2025) சென்னை, தரமணியில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத்துறையின் 'தமிழரசு' அலுவலகம் மற்றும் அச்சக வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவாக, ரூ.25 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்" மற்றும் "முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மார்பளவுச்சிலை" ஆகியவற்றைமாண்புமிகுதமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித்துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் முன்னிலையில் திறந்துவைத்தார்.
-
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின், செய்தி மக்கள் தொடர்புத் துறையால் தொடங்கப்பட்ட 'தமிழரசு' இதழானது கடந்த 55 ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் தொகுத்து வழங்கி, அரசின் அச்சு ஊடகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் படித்துப் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள், கள ஆய்வுகள், அவை தொடர்பான செய்தி வெளியீடுகள், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான வழிமுறைகள், பிற பொதுவான தகவல்கள் அடங்கிய மாத இதழாக 'தமிழரசு' இதழ் தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகள், சட்டமன்ற உரைகள், சட்ட மன்றத்தில் விதி 110 இன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொன்மொழிகள் போன்ற சிறப்பு வெளியீடுகளும், நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் தமிழ்ச் சான்றோர்களைப் போற்றும் விதமாகப் பல சிறப்பு மலர்களும் ‘தமிழரசு' இதழ் வாயிலாக வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த நான்காண்டுகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள 54 சிறப்பு வெளியீடுகளில் 19 சிறப்பு மலர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு. க. ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Cette histoire est tirée de l'édition May 13, 2025 de DINACHEITHI - NAGAI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு
1 min
December 02, 2025
DINACHEITHI - NAGAI
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு
“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
DINACHEITHI - NAGAI
சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு
காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
1 min
December 01, 2025
DINACHEITHI - NAGAI
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது
அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது
2 mins
November 29, 2025
DINACHEITHI - NAGAI
நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம்
சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் பட்டமளிப்பு விழாவில், நடிகர் சிவக்குமார், ஓவியர் குருசாமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.
1 mins
November 29, 2025
DINACHEITHI - NAGAI
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்
மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min
November 29, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்
சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
1 mins
November 29, 2025
DINACHEITHI - NAGAI
சென்னைக்கு 410 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல்: மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.
1 min
November 29, 2025
Translate
Change font size

