Poging GOUD - Vrij
யாருக்கான எதிர்காலத்தை கட்டமைக்கிறோம்?
Dinamani Thoothukudi
|July 30, 2025
நல்லவற்றைக் கற்று நாடு போற்றும் மனிதனாக தம்பிள்ளை வரவேண்டும் என்ற ஒற்றைக் கனவைத் தவிர பெற்றோருக்கு வேறெதுவுமில்லை. இத்தகைய குழந்தைகளை போதையின் பாதைக்கு இழுத்துச் செல்லும் கொடுஞ்செயலைச் செய்கிறவர்கள் பாதகர்கள்; துணைபோகிறவர்கள் படுபாதகர்கள்.
ன்றைய சமுதாயத்தில் மிகுதியான குற்றச் செயல்களுக்கு அடிப்படை காரணிகளாக பெரிதும் விளங்குபவை சமூக ஊடகங்களும் போதைப் பொருள் களின் அளவுகடந்த பயன்பாடும் என்றால் அது மிகை இல்லை. அதிலும், முக்கியமாக இந்த இரண்டு காரணிகளும் மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை இருண்டு போகச் செய்யும் சாத்தான்களாக உருமாறி வேகமெடுத்துள்ளன. சமூக ஊடகங்களில் நிகழ்கின்ற குற்றங்கள் தொழில்நுட்ப ரீதியாக நிகழ்த்தப்படுகின்றன. கண்காணிப்பதில் கூடுதல் சிரத்தை தேவைப்படுகிறது. ஆனால், போதைப் பொருள்களின் நடமாட்டம் என்பது கண்காணிக்கவும் தடுக்கவும் இயலக்கூடிய ஒன்றாகும். சான்றாக, வான் நுண்ணறிவு சுங்கத் துறை அதிகாரிகள் அண்மையில் திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ அளவுள்ள ஹைட்ரோ கஞ்சா எனப்படும் தீங்குதரும் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ.12 கோடி ஆகும். இந்திய அரசின் பத்திரிகைத் தகவல் பிரிவு அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டு இந்திய அளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.25,330 கோடி ஆகும். போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு தொடர்பான ஐ.நா. அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலக அளவில் ஏறத்தாழ 30 கோடிக்கும் அதிகமான மக்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உடல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதனால், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் என்பது சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சவாலாகவும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கு சீர்கேடாகவும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சீர்குலைவை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. பட்டிதொட்டி எங்கும் தங்குதடை இன்றி சமூக விரோதிகளால் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள போதைப் பொருள்களின் பயன்பாடு சிறியோர், பெரியோர் என்ற பாகுபாடின்றி மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, நாளைய இந்தியாவின் நம்பிக்கையாக விளங்குகிற மாணவர்களிடமும் அதிகரித்துவரும் ஆபத்தான சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்பது மிகவும் கவலை தருகின்ற ஒன்றாகும். முக்கியமாக, உயிருக்குப் பெரிதும் ஆபத்தாக விளங்குகிற வேதிப்பொருள்களால் உருவாக்கப்படுகிற செயற்கை போதைப் பொருள்களின் நுகர்வு அண்மைக்காலங்களில் அதிகரித்து இதன் விளைவாக இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, போதைப் பொருள
Dit verhaal komt uit de July 30, 2025-editie van Dinamani Thoothukudi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Thoothukudi
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Thoothukudi
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம்
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
1 min
June 07, 2026
Dinamani Thoothukudi
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Translate
Change font size
