Prøve GULL - Gratis
யாருக்கான எதிர்காலத்தை கட்டமைக்கிறோம்?
Dinamani Thoothukudi
|July 30, 2025
நல்லவற்றைக் கற்று நாடு போற்றும் மனிதனாக தம்பிள்ளை வரவேண்டும் என்ற ஒற்றைக் கனவைத் தவிர பெற்றோருக்கு வேறெதுவுமில்லை. இத்தகைய குழந்தைகளை போதையின் பாதைக்கு இழுத்துச் செல்லும் கொடுஞ்செயலைச் செய்கிறவர்கள் பாதகர்கள்; துணைபோகிறவர்கள் படுபாதகர்கள்.
ன்றைய சமுதாயத்தில் மிகுதியான குற்றச் செயல்களுக்கு அடிப்படை காரணிகளாக பெரிதும் விளங்குபவை சமூக ஊடகங்களும் போதைப் பொருள் களின் அளவுகடந்த பயன்பாடும் என்றால் அது மிகை இல்லை. அதிலும், முக்கியமாக இந்த இரண்டு காரணிகளும் மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை இருண்டு போகச் செய்யும் சாத்தான்களாக உருமாறி வேகமெடுத்துள்ளன. சமூக ஊடகங்களில் நிகழ்கின்ற குற்றங்கள் தொழில்நுட்ப ரீதியாக நிகழ்த்தப்படுகின்றன. கண்காணிப்பதில் கூடுதல் சிரத்தை தேவைப்படுகிறது. ஆனால், போதைப் பொருள்களின் நடமாட்டம் என்பது கண்காணிக்கவும் தடுக்கவும் இயலக்கூடிய ஒன்றாகும். சான்றாக, வான் நுண்ணறிவு சுங்கத் துறை அதிகாரிகள் அண்மையில் திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ அளவுள்ள ஹைட்ரோ கஞ்சா எனப்படும் தீங்குதரும் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ.12 கோடி ஆகும். இந்திய அரசின் பத்திரிகைத் தகவல் பிரிவு அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டு இந்திய அளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.25,330 கோடி ஆகும். போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு தொடர்பான ஐ.நா. அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலக அளவில் ஏறத்தாழ 30 கோடிக்கும் அதிகமான மக்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி உடல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதனால், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் என்பது சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சிக்கு ஒரு சவாலாகவும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் ஆரோக்கியத்துக்கு சீர்கேடாகவும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சீர்குலைவை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது. பட்டிதொட்டி எங்கும் தங்குதடை இன்றி சமூக விரோதிகளால் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள போதைப் பொருள்களின் பயன்பாடு சிறியோர், பெரியோர் என்ற பாகுபாடின்றி மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, நாளைய இந்தியாவின் நம்பிக்கையாக விளங்குகிற மாணவர்களிடமும் அதிகரித்துவரும் ஆபத்தான சூழ்நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்பது மிகவும் கவலை தருகின்ற ஒன்றாகும். முக்கியமாக, உயிருக்குப் பெரிதும் ஆபத்தாக விளங்குகிற வேதிப்பொருள்களால் உருவாக்கப்படுகிற செயற்கை போதைப் பொருள்களின் நுகர்வு அண்மைக்காலங்களில் அதிகரித்து இதன் விளைவாக இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, போதைப் பொருள
Denne historien er fra July 30, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Thoothukudi
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
தெலங்கானா அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
1 mins
November 01, 2025
Dinamani Thoothukudi
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Thoothukudi
அமைதிக்குப் பரிசு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நிமிஷத்தில் வெனிசுலாவின் எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சா டோவுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருக்கிறார் கள். அதுமட்டுமன்றி, 8 போர்களை நிறுத் தியுள்ளதால் தனக்கு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார். ஆனால், வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
3 mins
October 31, 2025
Dinamani Thoothukudi
தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் ஒரே நேரத்தில் மரியாதை
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் ஒரே நேரத்தில் மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
October 31, 2025
Translate
Change font size
