Poging GOUD - Vrij
பசுக்களைப் பாதுகாப்போம்!
Dinamani Thoothukudi
|June 07, 2026
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
இந்தச் சூழலில் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த பாரம்பரிய பசு வளர்ப்பையும், இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில், 'ஸ்ரீ கோசம்ப்ரக்ஷணசாலா டிரஸ்ட்' என்ற அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறையை அடுத்த திருவீழிமிழலையில் செயல்படும் இந்த அமைப்பின் நிர்வாகி ஆடிட்டர் குரு பிரசாத்திடம் பேசியபோது:
"ஆன்மிகம், அறிவியல் ரீதியில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் பெற்ற பசுக்களை தெய்வமாக முன்னோர்கள் போற்றினர். பசுக்களிடம் நாம் பெறும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகிய ஐந்தும் மனித வாழ்வியலில் முக்கியமானவை. நாட்டின் செல்வ வளங்களில் சிறப்பான பசுக்களைக் காப்பது ஆட்சியாளர்களின் கடமையாகும்.
இதனை ‘ஆநிரை மீட்டல்', 'ஆநிரை கவர் தல்' என்றெல்லாம் சங்க காலப் பாடல்கள் புகழ்ந்துள்ளன. பசுவின் துயர்துடைப்பதற்காக தனது மகனை தேரில் இட்ட எல்லாள மன்னரே 'மனு நீதிச் சோழன்' என்று வரலாற்றில் நிலை பெற்றார். இதுபோன்ற அனுபவங்கள்தான் கோ சாலையைத் தொடங்க உத்வேகத்தை அளித்தது. பசுக்களுக்குத் தேவையான நல்ல நீர், பசுமையான புல், வைக்கோல், வளமான நீர் ஆதாரம், இயற்கைத் தீவனம் அனைத்தும் ஒரே பகுதியில் கிடைக்கும் இடமாகப் பயணித்தேன்.
சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட நான், பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்தேன். திருவீழிமிழலைக்கு வந்தபோது, நான் பார்த்த இடம் ஒரு பனந்தோப்பு. 'பூலோகத்து கற்பக விருட்சம்' என்று கூறப்படும் பனை மரங்களும் பசுக்களும் சேர்ந்து அமைவது இறைவனின் பரிசாகும். அந்த இடத்திலேயே பசு பாதுகாப்பகத்தை 2007- இல் துவக்கினேன்.
Dit verhaal komt uit de June 07, 2026-editie van Dinamani Thoothukudi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!
உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
ஆட்சியையும் பிடிக்கலாம்
ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை
திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
1 min
June 07, 2026
Dinamani Thoothukudi
வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.
1 min
June 07, 2026
Dinamani Thoothukudi
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து - 2026
கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 12- இல் மெக்ஸிகோவில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
பசுக்களைப் பாதுகாப்போம்!
ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம்
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்
1 min
June 07, 2026
Dinamani Thoothukudi
ஆசிரியப்பாவின் சிறப்பு!
மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.
2 mins
June 07, 2026
Dinamani Thoothukudi
இலங்கையில் மீட்டெடுக்கப்படும் சித்த மருத்துவச் சுவடிகள்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மான உறவு தொப்புள் கொடி மரபு என்பதை ராமாயணம், மகா பாரத காலங்களில் இருந்தே அறியலாம்.
2 mins
June 07, 2026
Listen
Translate
Change font size
