Prøve GULL - Gratis
இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?
Dinamani Tiruchy
|October 08, 2025
இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மீது சில வர்த்தக மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருள், பருத்தி, நூல், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் தொடர்ந்து நீடிக்கிறது.

வங்கதேசம், நேபாளத்தில் ஏற்பட்ட இளைஞர்களின் திடீர் எழுச்சிக்கான காரணங்கள் ஒரே மாதிரியாக இருந்தா லும், அந்த எழுச்சியைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் ஆட்சிப் பொறுப்பாளர் கள் ஆற்றிய எதிர்வினையையும் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. இளை ஞர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நேபாளத்தில் அமைந்துள்ள இடைக்கால அரசு, அந்நாட்டில் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.
வங்கதேசத்தில் தேர்தலுக்கு முன்பாக சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, அங்கு தேர் தல் நடத்துவதை அந்நாட்டு இடைக்கால அரசு தாமதப்படுத்தியுள்ளது. உள்நாட் டிலும், சர்வதேச அளவிலும் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் தேர்தல் நடத் தப்படும் என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித் துள்ளார். அதாவது, அந்நாட்டில் முன் னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு ஆட்சிப்பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு 17 மாதங்களுக்கும் மேலான பின்னர், தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வங்கதேசத்தின் முன்னணி இஸ்லா மிய அமைப்பான ஜமாத்-ஏ-இஸ்லா மியைச் சேர்ந்தவர்கள், ஷேக் ஹசீனா வுக்கு எதிராக கிளர்ச்சியை முன்னெடுத்து இஸ்லாமிய சார்புகொண்ட மாணவர் தலைவர்கள் ஆகியோரின் இறுக்கமான பிடியில் யூனுஸின் அரசு உள்ளது. இஸ்லா மிய கட்சிகள் மற்றும் தீவிரவாதக் குழுக் களின் எழுச்சியை அவரின் அரசு சாத்தி யமாக்கியுள்ளது. அந்நாட்டில் ராணுவ மும் காவல் துறையும் ஒன்றுசேர்ந்த படை உள்ளபோதிலும் சட்டத்துக்குக் கட்டுப் படாத நடவடிக்கைகள் நீடிக்கின்றன.
அந்நாட்டில் ஹிந்துக்கள், பௌத்தர் கள், கிறிஸ்தவர்கள், அகமதியர்கள், சூஃபி குழுக்கள் அடங்கிய சிறுபான்மையின ருக்கு எதிராக ஆயிரக்கணக்கான வகுப்பு வாத வன்முறைச் சம்பவங்களை மனித உரிமை அமைப்புகள் அதிகாரபூர்வமாக பதிவு செய்துள்ளன. அந்த சம்பவங்க ளைத் தடுக்காமல் யூனுஸ் அரசு வேடிக்கை மட்டுமே பார்த்தது. வகுப்புவாத வன் முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க யூனுஸ் அரசு தவறிய தாக ஐ.நா.வின் பிப்ரவரி மாத அறிக்கை யில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Denne historien er fra October 08, 2025-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
Dinamani Tiruchy
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025

Dinamani Tiruchy
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Tiruchy
இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வியாழக்கிழமை வென்றது.
1 min
October 10, 2025
Dinamani Tiruchy
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது
சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
1 min
October 10, 2025
Dinamani Tiruchy
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025
Dinamani Tiruchy
மெர்சிடிஸ் பென்ஸின் நவராத்திரி விற்பனை புதிய உச்சம்
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நவராத்திரி தின விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டதால் அந்த நிறுவனம் இதுவரை இல்லாத அதிகபட்ச செப்டம்பர் காலாண்டு விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
1 min
October 08, 2025
Dinamani Tiruchy
வீடு திரும்பினார் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
1 min
October 08, 2025
Dinamani Tiruchy
ஜோகோவிச், ரூன் முன்னேற்றம்
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
October 08, 2025

Dinamani Tiruchy
இந்திய- வங்கதேச உறவின் வருங்காலம் என்ன?
இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவில் பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கதேசம் மீது சில வர்த்தக மற்றும் நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உணவுப் பொருள், பருத்தி, நூல், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் தொடர்ந்து நீடிக்கிறது.
3 mins
October 08, 2025
Dinamani Tiruchy
4-ஆவது தினமாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்
முக்கிய வங்கி பங்குகளின் உயர்வு மற்றும் உள் நாட்டு முதலீட்டு நிறுவனங் கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியது ஆகியவை காரண மாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக தினமாக செவ்வாய்க்கிழமையும் முன்னேற்றம் கண்டன.
1 min
October 08, 2025
Translate
Change font size