Prøve GULL - Gratis
தேவை அரசியல் விழிப்புணர்வு!
Dinamani Tiruchy
|August 09, 2025
நல்லவர்கள் என்று கூறிக்கொண்டு தங்கள் வீட்டில் இருந்து புலம்புவதால் நாம் நல்லவர்கள் அல்ல. நல்லது செய்வோருடன் இணைந்து செயல்படுவதுதான் நல்லோரின் செயல். தனித்திருந்து நாம் நல்லவர் என்று கூறுவது தவறு செய்கிறவர்களுக்கு ஊக்கமளிக்கிறோம் என்பதே பொருள்.
பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை மாணவி ஒருவர் ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டார். 'நான் இளம் அறிவியல் (இயற்பியல்) முடித்து தற்போது முதுநிலை அரசியல் அறிவியல் படித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார். அப்போது, ஓர் இளைஞர் "இளம் அறிவியல் (இயற்பியல்) முடித்துவிட்டு ஏன் அரசியல் அறிவியல் முதுநிலை படிக்க வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி கூறிய பதில் வகுப்பு எடுக்கச் சென்ற என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது.
இன்று நம் நாட்டில் தேநீர்க் கடையில் விவாதிக்கும் அரசியலைத்தான் அரசியலாகவே மக்கள் எண்ணுகிறார்கள். அப்படித்தான் எங்கும் பொறுப்பற்ற தன்மையில் பொறுப்புமிக்க தலைமைப்பதவியில் இருப்பவர்களும், நம் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும்கூட நடந்து கொள்கிறார்கள். இந்த நாட்டையும், மக்களையும் மையப்படுத்தி செயல்படுவதற்குப் பதிலாக, தன்னையும் தன் கட்சியையும் மையப்படுத்துகின்றனர்.
அரசியல் என்பது ஓர் அறிவியல். அறிவியல் என்றால் உண்மை; உண்மையுடன் இருந்தால்தான் அது அறிவியல். அந்த அறிவியலைப் படித்து மக்களிடம் அரசியல் அறிவியலை எடுத்துச் சென்று மக்களுக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால், இந்த நாட்டில் நல் அரசியலை-அற அரசியலை நம்மால் உருவாக்க முடியும். ஆகவேதான், இந்தப் படிப்பை நான் எனக்காகப் படிக்கவில்லை; இந்த சமூக அவலங்களைப் போக்கப் படிக்கிறேன்' என்றார்.
அந்த மாணவிக்கு இருந்த புரிதல், நாட்டுப்பற்று, சமூகப் பார்வை, பொறுப்பு நம் தலைவர்களிடம் இல்லையே; அவர் கூறிய பொறுப்பற்ற தன்மைக்கு நம் அரசியலில் பல உதாரணங்களைக் காட்டலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருள்களுக்கு புதிய வரிகளை விதித்தார். அதில் நம் அரசியல்வாதிகள் பொறுப்பற்று செயல்பட்ட விதத்தை நாம் அவர்களின் விவாதங்களில் கண்டோம். ஜப்பானுக்கும் டிரம்ப் இதையேதான் செய்தார். உடனே தன் நாட்டுப் பொருள்களின் விலையை ஜப்பான் குறைத்து விட்டது. பாதிப்பை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஓசையின்றி உடனே முடிவெடுத்துவிட்டனர்.
Denne historien er fra August 09, 2025-utgaven av Dinamani Tiruchy.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Tiruchy
 Dinamani Tiruchy
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்
1 mins
November 04, 2025
Dinamani Tiruchy
விதர்பா 501 ரன்கள் குவிப்பு
கோவை, நவ. 3: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் குவித்து திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.
1 min
November 04, 2025
Dinamani Tiruchy
டெட் தேர்வு: அனுமதிச் சீட்டு வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
November 04, 2025
Dinamani Tiruchy
ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!
பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
2 mins
November 04, 2025
 Dinamani Tiruchy
மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்
2 mins
November 04, 2025
 Dinamani Tiruchy
மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.
1 min
November 04, 2025
 Dinamani Tiruchy
இலங்கை கடற்படையினரால் 35 தமிழக மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, நாகை மீனவர்கள் 31 பேரையும், ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 mins
November 04, 2025
 Dinamani Tiruchy
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 mins
November 03, 2025
 Dinamani Tiruchy
சமன்செய்து சீர்தூக்கும் கோல்!
தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.
3 mins
November 03, 2025
Dinamani Tiruchy
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Translate
Change font size
