試す - 無料

தேவை அரசியல் விழிப்புணர்வு!

Dinamani Tiruchy

|

August 09, 2025

நல்லவர்கள் என்று கூறிக்கொண்டு தங்கள் வீட்டில் இருந்து புலம்புவதால் நாம் நல்லவர்கள் அல்ல. நல்லது செய்வோருடன் இணைந்து செயல்படுவதுதான் நல்லோரின் செயல். தனித்திருந்து நாம் நல்லவர் என்று கூறுவது தவறு செய்கிறவர்களுக்கு ஊக்கமளிக்கிறோம் என்பதே பொருள்.

- க. பழனித்துரை

பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை மாணவி ஒருவர் ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டார். 'நான் இளம் அறிவியல் (இயற்பியல்) முடித்து தற்போது முதுநிலை அரசியல் அறிவியல் படித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார். அப்போது, ஓர் இளைஞர் "இளம் அறிவியல் (இயற்பியல்) முடித்துவிட்டு ஏன் அரசியல் அறிவியல் முதுநிலை படிக்க வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி கூறிய பதில் வகுப்பு எடுக்கச் சென்ற என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது.

இன்று நம் நாட்டில் தேநீர்க் கடையில் விவாதிக்கும் அரசியலைத்தான் அரசியலாகவே மக்கள் எண்ணுகிறார்கள். அப்படித்தான் எங்கும் பொறுப்பற்ற தன்மையில் பொறுப்புமிக்க தலைமைப்பதவியில் இருப்பவர்களும், நம் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும்கூட நடந்து கொள்கிறார்கள். இந்த நாட்டையும், மக்களையும் மையப்படுத்தி செயல்படுவதற்குப் பதிலாக, தன்னையும் தன் கட்சியையும் மையப்படுத்துகின்றனர்.

அரசியல் என்பது ஓர் அறிவியல். அறிவியல் என்றால் உண்மை; உண்மையுடன் இருந்தால்தான் அது அறிவியல். அந்த அறிவியலைப் படித்து மக்களிடம் அரசியல் அறிவியலை எடுத்துச் சென்று மக்களுக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால், இந்த நாட்டில் நல் அரசியலை-அற அரசியலை நம்மால் உருவாக்க முடியும். ஆகவேதான், இந்தப் படிப்பை நான் எனக்காகப் படிக்கவில்லை; இந்த சமூக அவலங்களைப் போக்கப் படிக்கிறேன்' என்றார்.

அந்த மாணவிக்கு இருந்த புரிதல், நாட்டுப்பற்று, சமூகப் பார்வை, பொறுப்பு நம் தலைவர்களிடம் இல்லையே; அவர் கூறிய பொறுப்பற்ற தன்மைக்கு நம் அரசியலில் பல உதாரணங்களைக் காட்டலாம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருள்களுக்கு புதிய வரிகளை விதித்தார். அதில் நம் அரசியல்வாதிகள் பொறுப்பற்று செயல்பட்ட விதத்தை நாம் அவர்களின் விவாதங்களில் கண்டோம். ஜப்பானுக்கும் டிரம்ப் இதையேதான் செய்தார். உடனே தன் நாட்டுப் பொருள்களின் விலையை ஜப்பான் குறைத்து விட்டது. பாதிப்பை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஓசையின்றி உடனே முடிவெடுத்துவிட்டனர்.

Dinamani Tiruchy からのその他のストーリー

Dinamani Tiruchy

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruchy

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruchy

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruchy

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruchy

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruchy

அம்மானை!

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size