Facebook Pixel வகுப்பறையில் பொழிந்த ஆய்வுரை | Dinamani Namakkal - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

வகுப்பறையில் பொழிந்த ஆய்வுரை

Dinamani Namakkal

|

July 26, 2025

உலகளவில் பெரிதும் வாசிக்கப்பட்ட அண்மையில் மிகச் சிறப்பாக அறிவியல் நூல்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டின் முதல் பத்து தலைப்புகளுள் வருவது ரிச்சர்ட் பெயின்மன் தொகுத்தளித்த 'பெயின்மன் இயற்பியல் உரைகள்'.

- ஒளவை அருள்

மூன்று தொகுதிகளைக் கொண்ட வெளியீடாகும். இயற்பியலைக் கற்போரும் கற்பிப்போரும் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கான 'இயற்பியலுக்கான பைபிள்' எனலாம். நோபல் பரிசு பெற்றவரான பெயின்மன் ஆகச் சிறந்த ஆசிரியராகவும் அறியப் பெற்றவர். இயற்பியலின் பல்வேறு தலைப்புகளை அவருக்கே உரித்தான அற்புத நடையில் உரையாகத் தந்துள்ளார்.

அமெரிக்காவின் கால்டெக் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பயில்வோருக்கு நிகழ்த்தப் பெற்ற நுட்பமான உரைகள்; சிக்கலான நுணுக்கமான கருத்துகளை மிகத் தெளிவாகவும் உள்ளுணர்வுடன் தெற்றென உணருமாறும் பேரூக்கத்துடனும் விளக்கிச் சொல்பவர் என்பதால், இவருடைய அணுகுமுறை மாணவர்களுக்கு ஆழ் அறிவியல் அடிப்படைகளை அறிவார்ந்து உணரச் செய்வதாகவும் கேட்போர் மனதில் ஆழப்பதியும்.

ரிச்சர்ட் பெயின்மன், தனது இயற்பியல் வகுப்பின் அறிமுகப் பாடத்தை நடத்தி அறுபது ஆண்டுகள் கழித்து இன்றளவும் ஆகச் சிறந்த இயற்பியல் நூல்களில் ஒன்றாகச் செம்பயன் நல்கிக் கொண்டிருக்கிறது. பன்னிரண்டுக்கும் அதிகமான மொழிகளில் அவை மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் 15 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.

நீண்ட காலத்திற்கு இவ்வளவு பரந்த தாக்கத்தை வேறெந்த இயற்பியல் நூல்களின் தொகுப்பும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மையாகும். அதன் தமிழாக்கம் சென்னையிலுள்ள சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. 1961-64-இல் இயற்பியல் இளமறிவியல் வகுப்பில் பெயின்மனின் உரைகள் வரலாற்று ஆவணங்களாகும். கால்டெக் பல்கலைக்கழகத்தில் எந்தப் பாடத்தை முதன்மைப் பாடமாகப் படித்தாலும், முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பகுதிக்கான உரை நூல்களாகும்.

FLERE HISTORIER FRA Dinamani Namakkal

Dinamani Namakkal

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

சோழர் கால செப்பேடுகளை காட்சிப்படுத்த வேண்டும்

நெதர்லாந்து ஒப்படைத்த ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகளை நாகையில் பாதுகாப்புடன் காட்சிப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

தமிழக ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு 10 நாள்களுக்குப் பதிலாக 30 நாள்கள் வேலை வழங்குவதுடன், அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Namakkal

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகம் அருகே விமான நிலையம் குத்தகை

இலங்கையில் சீனக் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகில் இருக்கும் மத்தள ராஜபட்ச சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் இலங்கையின் நடவடிக்கையை, இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Translate

Share

-
+

Change font size