Prøve GULL - Gratis
வணிகம் சரி...சமூக நலன்...
Dinamani Kanyakumari
|September 08, 2025
நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. நிறைய வருமானம் ஈட்டக்கூடிய மனித இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் எந்தச் சட்டத்துக்குள்ளும் அடங்க மறுக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, வெளியே வந்தபோது என் உடல் முழுவதும் ரத்தத் திவலைகள், தெறித்திருப்பதைப்போல் உணர்ந்தேன். காசு கொடுத்து உயிர் வதையையும், ரத்தத்தையும், வன்முறையையும் பார்த்துவிட்டு வந்தது குறித்து வேதனையாக இருந்தது.
ஒரு திரைப்படத்துக்குப் போகிறோம் என்றால் 3 மணி நேரம் நம் கவலையையும், கழுத்தை நெரிக்கும் வேலைகளையும் மறந்து, மனதை லேசாக்கிக் கொள்ளத்தானே தவிர, ஈவு இரக்கம் இல்லாமல் தலையைச் சீவுவதையும், சுட்டுத் தள்ளுவதையும் பார்க்கவா? தற்போது வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றன.
இரண்டரை மணிநேரம், கொலைகளைப் பார்க்கும் இளைஞர்களுக்கு ரத்தமும், வன்முறையும் பிடித்துப்போகிறது. தன் அபிமான கதாநாயகன் கொலை செய்வதை ஆரவாரத்துடன் அங்கீகரிக்கிறார்கள். இதன் காரணமாக நடுத் தெருவில் ஒருவரை வெட்டுவதும், ஓட ஓட விரட்டிக்கொள்வதும், பள்ளிகளில் கொலை நடப்பதும் சாதாரண நிகழ்வுகளாகி வருகின்றன.
உலகத்தில் நடப்பதைத் தானே காட்டுகிறோம் என்பார்கள் இயக்குநர்கள். நடப்பதையெல்லாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சமூகத்தில் இவை ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும். நாயகர்கள் வன்முறையைத் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வாகப் பயன்படுத்துவதைப் பார்த்து இளைஞர்கள் இதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறார்கள். அதிகப்படியான வன்முறை காட்சிகள் மக்கள் மனதில் சுரக்கும் ஈரத்தை வற்றிப் போக வைக்கிறது.
சமூகப் பண்பாடுகள் மற்றும் விழுமியங்கள் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு படைப்பாளியும் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டியது முக்கியம். சினிமா வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல; அது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வலிமையான கருவி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
அக்காலத் திரைப்படங்கள் சமூக சீர்திருத்தக் கருத்துகளையும், நாட்டுப்பற்றையும், குடும்ப உறவுகள் மற்றும் காதலையும் கருவாகக்கொண்டிருந்தன. கொலை நடக்கும்; ஆனால், கொத்துக் கொத்தாக அல்ல; சுத்தியலைக் கொண்டு ஒருவரின் மண்டையை உடைப்பதை அப்படியே காட்ட மாட்டார்கள். இப்போதோ திரையரங்கம் முழுக்க ரத்த வாடை வீசுவதுபோல் உள்ளது. நம் சமூக ஊடகங்கள் இந்தத் தலைமுறைக்கு வன்முறையையும், ஆபாசத்தையும் கற்றுக் கொடுக்கின்றன.
Denne historien er fra September 08, 2025-utgaven av Dinamani Kanyakumari.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Kanyakumari
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Kanyakumari
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Kanyakumari
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Kanyakumari
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Kanyakumari
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Kanyakumari
தெலங்கானா அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
1 mins
November 01, 2025
Dinamani Kanyakumari
அமைதிக்குப் பரிசு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நிமிஷத்தில் வெனிசுலாவின் எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சா டோவுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருக்கிறார் கள். அதுமட்டுமன்றி, 8 போர்களை நிறுத் தியுள்ளதால் தனக்கு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார். ஆனால், வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
3 mins
October 31, 2025
Dinamani Kanyakumari
தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் ஒரே நேரத்தில் மரியாதை
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் ஒரே நேரத்தில் மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
October 31, 2025
Dinamani Kanyakumari
தேவர் ஒரு சமூகத்தினருக்கானவர் அல்லர்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
1 min
October 31, 2025
Translate
Change font size
