Prøve GULL - Gratis
அமைதிக்குப் பரிசு!
Dinamani Kanyakumari
|October 31, 2025
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நிமிஷத்தில் வெனிசுலாவின் எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சா டோவுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருக்கிறார் கள். அதுமட்டுமன்றி, 8 போர்களை நிறுத் தியுள்ளதால் தனக்கு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார். ஆனால், வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
 
 வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமை களுக்காக அயராது உழைத்து வருபவர் மச்சாடோ. சர்வாதிகாரப்போக்கில் இருந்து, ஜனநாயகக் கட்டமைப்பை நோக்கி, அமை தியான மாற்றத்தை எதிர்நோக்கி மரியா போராடி வருவதாக புகழாரம் சூட்டப்பட் டிருக்கிறது. டிரம்ப் உள்ளிட்ட 388 பேர் களின் பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெனிசுலாவின் ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இங்கு தோட்டாக்கள் வேண்டாம்; வாக்குகள் தான் வேண்டும்; ஜனநாயக முறையில் தேர் தல் நடத்தலாம் என்று 20 ஆண்டுகளுக்கும் மேல் மரியா போராடி வருகிறார். நேர்மை யான சுதந்திரமான தேர்தல் நடத்த வேண் டும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற இவரது போராட்டத்துக்கு, நோபல் பரிசு ஓர் அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது.
லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் போராளி - 1967-ஆம் ஆண்டு அக்டோ பர் 7-ஆம் தேதி வெனிசுலா நாட்டின் கராகஸ்லில் பிறந்தவர். அரசியல் மட்டு மன்றி தொழில் துறை பொறியாளராகவும் செயல்பட்டுள்ளார். 2011 முதல் 2014 வரை வெனிசுலா நாட்டின் தேசிய சபையின் உறுப்பினராக இருந்தார். இந்த நாட்டின் ஜனநாயக அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன் னெடுத்து வருபவர். இதனால், பொது மக்கள் மத்தியில் நற்பெயரை எடுத்து வருகிறார்.
மச்சாடோ கடந்த 14 மாதங்களாக தலை மறைவாக வாழ்ந்து வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும்கூட, அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது இந்த நாட்டு மக்களின் மத்தியில் அவருக்கு ஒரு பெரும் புகழைச் சம்பா தித்துத் தந்திருக்கிறது. வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆகவேதான், இவரை 'இரும்புப் பெண்மணி' என்று அந்த நாட்டு மக்கள் பெருமையோடு அழைக்கிறார்கள்.
வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சியாளர் நிக்கோலஸ் மடூரோ வின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்துப் போராடி வருகிறார். அச்சுறுத்தல்கள், கைதுகள் மற் றும் அரசியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறார். ஆனா லும், ஆயுதம் இல் லாமலே தங்களது போராட்டம் தொட ரும் என்று துணிச்சலையும், உண்மையை யும் துணைக்கு அழைத்துக் கொண்டு இவரது ஜனநாயகப் போராட்டக் களம் பேசுபொருளாகி இருக்கிறது.
Denne historien er fra October 31, 2025-utgaven av Dinamani Kanyakumari.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Kanyakumari
 
 Dinamani Kanyakumari
அமைதிக்குப் பரிசு!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நிமிஷத்தில் வெனிசுலாவின் எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சா டோவுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருக்கிறார் கள். அதுமட்டுமன்றி, 8 போர்களை நிறுத் தியுள்ளதால் தனக்கு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார். ஆனால், வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
3 mins
October 31, 2025
Dinamani Kanyakumari
தேவர் நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., தினகரன், செங்கோட்டையன் ஒரே நேரத்தில் மரியாதை
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் ஒரே நேரத்தில் மரியாதை செலுத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
October 31, 2025
Dinamani Kanyakumari
தேவர் ஒரு சமூகத்தினருக்கானவர் அல்லர்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
1 min
October 31, 2025
Dinamani Kanyakumari
அன்புள்ள ஆசிரியருக்கு...
நடுத்தர மக்களின் வளர்ச்சி
1 min
October 31, 2025
Dinamani Kanyakumari
இரட்டைப் பெருமை!
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
2 mins
October 31, 2025
Dinamani Kanyakumari
நிதி எழுப்பும் கேள்வி!
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
2 mins
October 31, 2025
Dinamani Kanyakumari
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
October 31, 2025
Dinamani Kanyakumari
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Dinamani Kanyakumari
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
1 mins
October 31, 2025
Dinamani Kanyakumari
டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
October 30, 2025
Listen
Translate
Change font size

