試す - 無料

வணிகம் சரி...சமூக நலன்...

Dinamani Kanyakumari

|

September 08, 2025

நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. நிறைய வருமானம் ஈட்டக்கூடிய மனித இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் எந்தச் சட்டத்துக்குள்ளும் அடங்க மறுக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

- வெ.இன்சுவை

ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, வெளியே வந்தபோது என் உடல் முழுவதும் ரத்தத் திவலைகள், தெறித்திருப்பதைப்போல் உணர்ந்தேன். காசு கொடுத்து உயிர் வதையையும், ரத்தத்தையும், வன்முறையையும் பார்த்துவிட்டு வந்தது குறித்து வேதனையாக இருந்தது.

ஒரு திரைப்படத்துக்குப் போகிறோம் என்றால் 3 மணி நேரம் நம் கவலையையும், கழுத்தை நெரிக்கும் வேலைகளையும் மறந்து, மனதை லேசாக்கிக் கொள்ளத்தானே தவிர, ஈவு இரக்கம் இல்லாமல் தலையைச் சீவுவதையும், சுட்டுத் தள்ளுவதையும் பார்க்கவா? தற்போது வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

இரண்டரை மணிநேரம், கொலைகளைப் பார்க்கும் இளைஞர்களுக்கு ரத்தமும், வன்முறையும் பிடித்துப்போகிறது. தன் அபிமான கதாநாயகன் கொலை செய்வதை ஆரவாரத்துடன் அங்கீகரிக்கிறார்கள். இதன் காரணமாக நடுத் தெருவில் ஒருவரை வெட்டுவதும், ஓட ஓட விரட்டிக்கொள்வதும், பள்ளிகளில் கொலை நடப்பதும் சாதாரண நிகழ்வுகளாகி வருகின்றன.

உலகத்தில் நடப்பதைத் தானே காட்டுகிறோம் என்பார்கள் இயக்குநர்கள். நடப்பதையெல்லாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சமூகத்தில் இவை ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள் குறித்து அவர்கள் யோசிக்க வேண்டும். நாயகர்கள் வன்முறையைத் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வாகப் பயன்படுத்துவதைப் பார்த்து இளைஞர்கள் இதை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்கிறார்கள். அதிகப்படியான வன்முறை காட்சிகள் மக்கள் மனதில் சுரக்கும் ஈரத்தை வற்றிப் போக வைக்கிறது.

சமூகப் பண்பாடுகள் மற்றும் விழுமியங்கள் பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு படைப்பாளியும் சமூகப் பொறுப்புடன் செயல்படவேண்டியது முக்கியம். சினிமா வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல; அது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வலிமையான கருவி என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அக்காலத் திரைப்படங்கள் சமூக சீர்திருத்தக் கருத்துகளையும், நாட்டுப்பற்றையும், குடும்ப உறவுகள் மற்றும் காதலையும் கருவாகக்கொண்டிருந்தன. கொலை நடக்கும்; ஆனால், கொத்துக் கொத்தாக அல்ல; சுத்தியலைக் கொண்டு ஒருவரின் மண்டையை உடைப்பதை அப்படியே காட்ட மாட்டார்கள். இப்போதோ திரையரங்கம் முழுக்க ரத்த வாடை வீசுவதுபோல் உள்ளது. நம் சமூக ஊடகங்கள் இந்தத் தலைமுறைக்கு வன்முறையையும், ஆபாசத்தையும் கற்றுக் கொடுக்கின்றன.

Dinamani Kanyakumari からのその他のストーリー

Dinamani Kanyakumari

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Kanyakumari

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Kanyakumari

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Kanyakumari

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Kanyakumari

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size