試す 金 - 無料
சிதறும் கனவுகள்!
Penmani
|July 2025
இனிய தோழர்! நலம் தானே?
-
குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறி நொறுங்கிய துன்பியல் நிகழ்வில் இறந்த பயணிகளுக்கு நம் கண்ணீர் அஞ்சலிகள்.
நடுவானில் பிரச்னை ஏற்படவில்லை. காலநிலையில் பாதகம் இல்லை, பறவைகள் எதுவும் மோதவில்லை, பைலட்டுகளின் அனுபவங்களுக்கும் குறை வில்லை. இருந்தும் இந்த கொடூர விபத்து எப்படி ஏற்பட்டது?
கிட்டத்தட்ட 55 டன் எரிபொருள் நிரம்பி இருந்தது. லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு கிளம்பிய ஓரிரு நிமிடங்களுக்குள் எப்படி விபத்தில் சிக்கியது?
எத்தனையோ தியரிகள் உலா வருகின்றன. மே டே மே டே என்று விமானி கடைசி வினாடியில் கதறும் வீடியோ மனதை பிசைகிறது. விவாத மேடைகளில் முன்னாள் விமான பைலட்டுகள் இது போன்ற நெருக்கடி நிலை சமயங்களில் சமாளித்ததை விவரிக்கிறார்கள். ஆனால் ஒரு விஷயம் நம்மை உறுத்துகிறது.
CELEBI என்று ஒரு நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. விமானங்களையும் விமான நிலையங்களையும் விமானத்தில் ஏற்றப்படும் சுமைகளையும் பராமரிப்பதில் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற கம்பெனி இது. சர்வதேச விமான நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்து வந்தது. ஆமதாபாதின் சர்வதேச விமான நிலையமும் அவற்றில் ஒன்று. இங்கிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தான் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து சிதறியது.
CELEBI நிறுவனத்துடன் இந்திய அரசு 2008-ல் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. இது 2032 வரைக்கும் ஆன ஒப்பந்தம். ஆனால் இந்த வருடம் மே மாதம் 15-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் சடார் என்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டு செலிபி வெளியேற்றப்பட்டது. ஒப்பந்த காலம் முடிவதற்கு இன்னும் ஏழு ஆண்டுகள் இருக்கும் நிலையில் ஏன் நடுவில் வெளியேற்றப்பட்டது?
このストーリーは、Penmani の July 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Penmani からのその他のストーリー
Penmani
தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!
தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....
7 mins
October 2025
Penmani
தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!
அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.
2 mins
October 2025
Penmani
ஆலங்காட்டு ரகசியம்!
சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.
1 min
October 2025
Penmani
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
3 mins
October 2025
Penmani
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
2 mins
October 2025
Penmani
தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!
தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.
4 mins
October 2025
Penmani
இனிப்பு பிறந்த கதை
இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
1 min
October 2025
Penmani
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!
யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
October 2025
Penmani
தீபாவளி பூ!
இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.
1 min
October 2025
Penmani
மதுரையில் மஹா பெரியவர் கோயில்!
திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!
1 min
October 2025
Translate
Change font size
