試す 金 - 無料
டிரம்ப்பின் எச்சரிக்கை-பயமா, பலவீனமா?
Dinamani Nagapattinam
|July 22, 2025
ஆசிய நாடுகளில் பலவும் இந்த வரி விதிப்பு அலைக்கழிப்புகளால் அவதிப்படுகின்றன என்றாலும், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பாதிப்பு யாது? என்ற வினாக்கள் எழுகின்றன. இந்தியா மௌனம் சாதிக்கிறது. டிரம்ப் தனது நிலைப்பாட்டில் தடுமாறுகிறார் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது.
மெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே உலக நாடுகளுடனான வர்த்தகம், கூடுதல் வரி விதிப்பு பற்றி பேசி வருகிறார். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிகம் இறக்குமதி வரி விதிப்பதால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து கூறி வரும் அதிபர், அதை சம நிலைப்படுத்த பரஸ்பரம் வரி விதிப்பது என்று தீர்மானித்தார்.
அமெரிக்க அதிபரின் இந்தப் போக்கு உலக நாடுகளிடையே ஆரம்பத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது என்றாலும், அமெரிக்காவிலேயே அவரின் கருத்துக்கு எதிர் குரல்கள் எழுந்தன. இந்தியா போன்ற நாடுகளோடு முரண்படுவதால் அமெரிக்கா மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளில் சிக்கல்களை சந்திக்கும் என்ற காரணம் டிரம்பை சிந்திக்க வைத்தது.
எந்தெந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியிட்டார். பின்னர், இந்த பரஸ்பர வரி விதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாகவும் அறிவித்தார். கடந்த ஜூலை 9-ஆம் தேதியுடன் 90 நாள்கள் முடிவடைந்த நிலையில், காலக்கெடு ஆகஸ்ட் ஒன்றாம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இருமுறை நாள்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த முறை வரி விகித உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் நாளில் அமலுக்கு வருவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டதா என்ற வினா எழுப்பப்பட்டதும் உறுதிதான்; ஆனாலும், இன்னும் 100 சதவீதம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று ஊசலாட்டமான பதிலையே அமெரிக்க அதிபர் தந்துள்ளார்.
டிரம்ப்பின் இந்தப் பதில் மற்ற நாடுகளை ஆசுவாசப்பட வைத்துள்ளது.
தனது முடிவை நிறுத்திவைப்பதாகவோ, தான் பின்வாங்குவதாகவோ இருத்தல் கூடாது என்று கருதியவர் 14 நாடுகளின் தலைவர்களுக்கு வரி விதிப்பு உயர்த்தப்படுவதற்கான கடிதங்களை அனுப்பி விட்டு, அதை தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவுடன் இந்த நாடுகளுக்கு இருக்கும் உறவை பொருத்து வரி விகிதங்கள் குறைக்கப்படவோ அல்லது உயர்த்தப்படவோ வாய்ப்புள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதை இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.
このストーリーは、Dinamani Nagapattinam の July 22, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Nagapattinam からのその他のストーリー
Dinamani Nagapattinam
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Nagapattinam
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த்
உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். அவர் வரும் நவம்பர் 24-ஆம் தேதி பதவி ஏற்பார்.
1 min
October 31, 2025
Dinamani Nagapattinam
அன்புள்ள ஆசிரியருக்கு...
நடுத்தர மக்களின் வளர்ச்சி
1 min
October 31, 2025
Dinamani Nagapattinam
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Dinamani Nagapattinam
இரட்டைப் பெருமை!
பஹ்ரைனில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகளில், கபடியில் ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது இந்தியா. ஆசிய இளையோர் போட்டியில் முதல் முறையாக நிகழாண்டுதான் கபடிப் போட்டி சேர்க்கப்பட்டது. ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலுமே இறுதிச் சுற்றில் இந்தியா சந்தித்த எதிரணி ஈரான் என்பது இப்போட்டியின் மற்றொரு சுவாரசியம்.
2 mins
October 31, 2025
Translate
Change font size
