Versuchen GOLD - Frei

டிரம்ப்பின் எச்சரிக்கை-பயமா, பலவீனமா?

Dinamani Nagapattinam

|

July 22, 2025

ஆசிய நாடுகளில் பலவும் இந்த வரி விதிப்பு அலைக்கழிப்புகளால் அவதிப்படுகின்றன என்றாலும், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பாதிப்பு யாது? என்ற வினாக்கள் எழுகின்றன. இந்தியா மௌனம் சாதிக்கிறது. டிரம்ப் தனது நிலைப்பாட்டில் தடுமாறுகிறார் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது.

- கோதை ஜோதிலட்சுமி

மெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே உலக நாடுகளுடனான வர்த்தகம், கூடுதல் வரி விதிப்பு பற்றி பேசி வருகிறார். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிகம் இறக்குமதி வரி விதிப்பதால் அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து கூறி வரும் அதிபர், அதை சம நிலைப்படுத்த பரஸ்பரம் வரி விதிப்பது என்று தீர்மானித்தார்.

அமெரிக்க அதிபரின் இந்தப் போக்கு உலக நாடுகளிடையே ஆரம்பத்தில் அச்சத்தை ஏற்படுத்தியது என்றாலும், அமெரிக்காவிலேயே அவரின் கருத்துக்கு எதிர் குரல்கள் எழுந்தன. இந்தியா போன்ற நாடுகளோடு முரண்படுவதால் அமெரிக்கா மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளில் சிக்கல்களை சந்திக்கும் என்ற காரணம் டிரம்பை சிந்திக்க வைத்தது.

எந்தெந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியிட்டார். பின்னர், இந்த பரஸ்பர வரி விதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாகவும் அறிவித்தார். கடந்த ஜூலை 9-ஆம் தேதியுடன் 90 நாள்கள் முடிவடைந்த நிலையில், காலக்கெடு ஆகஸ்ட் ஒன்றாம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இருமுறை நாள்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த முறை வரி விகித உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் நாளில் அமலுக்கு வருவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டதா என்ற வினா எழுப்பப்பட்டதும் உறுதிதான்; ஆனாலும், இன்னும் 100 சதவீதம் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்று ஊசலாட்டமான பதிலையே அமெரிக்க அதிபர் தந்துள்ளார்.

டிரம்ப்பின் இந்தப் பதில் மற்ற நாடுகளை ஆசுவாசப்பட வைத்துள்ளது.

தனது முடிவை நிறுத்திவைப்பதாகவோ, தான் பின்வாங்குவதாகவோ இருத்தல் கூடாது என்று கருதியவர் 14 நாடுகளின் தலைவர்களுக்கு வரி விதிப்பு உயர்த்தப்படுவதற்கான கடிதங்களை அனுப்பி விட்டு, அதை தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவுடன் இந்த நாடுகளுக்கு இருக்கும் உறவை பொருத்து வரி விகிதங்கள் குறைக்கப்படவோ அல்லது உயர்த்தப்படவோ வாய்ப்புள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதை இந்த அறிவிப்பு உணர்த்துகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.

time to read

3 mins

November 03, 2025

Dinamani Nagapattinam

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Nagapattinam

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Nagapattinam

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 03, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Translate

Share

-
+

Change font size