試す - 無料

கைதான 3 பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரணை

Dinamani Chennai

|

July 12, 2025

டிஜிபி சங்கர் ஜிவால்

கைதான 3 பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரணை

சென்னை, ஜூலை 11: ஆந்திரம், கர்நாடகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் வெளிநாட்டுத் தொடர்பு கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் (60). அல்-உம்மா பயங்கரவாத அமைப்பில் இருந்த இவர், வெடிகுண்டு செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர். அபுபக்கர் சித்திக் மீது கடந்த 1995-ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு, நாகூர் இந்து முன்னணி பிரமுகர் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு புத்தக வடிவிலான வெடிகுண்டை அனுப்பி அவரின் மனைவி தங்கத்தை கொலை செய்த வழக்கு, 1999-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகம், திருச்சி, கோவை ஆகிய இடங்களிலும், கேரளத்திலும் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2011-ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே பாஜக தலைவர் எல்.கே.அத்வானியின் ரதயாத்திரைக்குறி வைத்து பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012-இல் வேலூரில் மருத்துவர் அரவிந்த் ரெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு, 2013-இல் பெங்களூரு பாஜக அலுவலகம் முன் வெடிகுண்டு வைத்த வழக்கு ஆகிய வழக்குகள் உள்ளன.

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளைக் (கஞ்சா) கடத்தி வந்த மும்பையைச் சேர்ந்த ஆசிரியைகள் உள்பட 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

உக்ரைன் போருக்குப் பிறகு ரூ.15.17 லட்சம் கோடிக்கு ரஷிய கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா!

உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷிய கச்சா எண்ணெய்யை சுமார் 14,388 கோடி யூரோவிற்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15.17 லட்சம் கோடி) இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.7) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

நிஃப்ட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜன.13 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய ஆடை வடிவமைப்பு தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜன.13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.9-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

திமுக ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார்

திமுக ஆட்சியில் ரூ.ரவியை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி புகார் தெரிவித்தார்.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஐஎஸ்எல் கால்பந்து தொடருக்கு புத்துயிர்: பிப். 14-இல் தொடக்கம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் 2026 ஆட்டங்கள் வரும் பிப்.14 முதல் தொடங்கி நடைபெறும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 07, 2026

Dinamani Chennai

பொங்கல் பண்டிகைக்கு 38,175 சிறப்புப் பேருந்துகள்

அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

time to read

2 mins

January 07, 2026

Dinamani Chennai

வளர்ச்சித் திட்டப் பணிகள்: பிப்.10-க்குள் முடிக்க உத்தரவு

சென்னையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தையும் பிப்.10-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் ஆர். பிரியா உத்தரவிட்டார்.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size