कोशिश गोल्ड - मुक्त
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல்
DINACHEITHI - DHARMAPURI
|June 06, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.
-
வனக் காவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வனக் காவலர்கள், நீர் நிலைப்பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்கள் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.
மனிதகுலம் சந்தித்துவரும் பெரும் சவாலாக தற்போது காலநிலை மாற்றம் உள்ளது. அதனை எதிர்கொள்ள இவ்வரசு பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருவதோடு, இயற்கைப் பாதுகாப்பினையும் வளங்குன்றா வளர்ச்சியையும் தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டை ஒழித்திட உறுதியான நடவடிக்கை எடுத்து வருவதுடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த துணிப்பை பயன்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை "திட்டத்தை அறிமுகப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் தமிழ்நாடு மீன் வலை முன்னெடுப்பின் கீழ், சென்னை காசிமேட்டில் நிறுவப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்வலை சேகரிப்பு மையம் மூலம் கைவிடப்பட்ட மீன் வலைகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுவதால் கடலில் நெகிழி மாசுபாடு குறைந்து, கடல் பல்லுயிரியம் பாதுகாக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பேணிக் காத்திட இவ்வரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டது.
இம் மையத்திற்கான கட்டடம் சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய பசுமை கட்டடமாக உருவாக்கப்படும். இக்கட்டடத்தின் மொத்த நிலப்பரப்பு 16,555 சதுர அடி மற்றும் மொத்த கட்டுமானப் பரப்பளவு 46,823 சதுர அடி ஆகும்.
यह कहानी DINACHEITHI - DHARMAPURI के June 06, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - DHARMAPURI से और कहानियाँ
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் வழங்கும் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது.
1 min
April 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்திற்கு அதிக எம்.பி.-க்கள் இடம் கிடைப்பதை தி.மு.க. விரும்பவில்லை
கோவையில் நேற்று நடந்த என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:-
1 min
April 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
பாஜக, அதிமுக-விற்கு அளிக்கக்கூடிய வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடக்கூடிய தடைக்கற்கள்
திருப்பூரில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்
1 min
April 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
‘அதிமுக மக்களுக்கான கட்சி; திமுக குடும்பத்திற்கான கட்சி’
சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பேச்சு
1 min
April 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலி
வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் வேன் விழுந்த விபத்தில் 6 பேர் பலியானார்கள்.
1 min
April 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தை மொத்தமாக திரும்ப பெற வேண்டும்
மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
1 min
April 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: கறுப்புக்கொடி ஏற்றினர், மு.க. ஸ்டாலின்
தொகுதி மறுவரையறையை கண்டித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் கறுப்புக்கொடியை ஏற்றினார்.
1 mins
April 17, 2026
DINACHEITHI - DHARMAPURI
ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரிகளை பொதுமக்களுக்கு வினியோகிக்க கூடாது
தமிழ்நாட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இல்லத்தரசி, திட்டத்தின் கீழ், ரூ.
1 min
April 16, 2026
DINACHEITHI - DHARMAPURI
திருவள்ளூர் அருகே கல்லூரி மாணவிக்கு இம்சை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அ. தி. மு. க .
1 min
April 16, 2026
DINACHEITHI - DHARMAPURI
குமரி மாவட்டத்தில் என்.டி.ஏ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி நாகர்கோவிலில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்தினார்.
1 min
April 16, 2026
Translate
Change font size

