Essayer OR - Gratuit
கண்ணியக் காவலர் கக்கன்ஜி!
Dinamani Pudukkottai
|June 18, 2025
மதுரை அரசு மருத்துவமனையில் கக்கன்ஜி சிகிச்சை பெற்றபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவரைச் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். "என்ன உதவி உங்களுக்கு வேண்டும்?" என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது, "உங்கள் அன்பு மட்டும் போதும்" என்றார் கக்கன்ஜி.
வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்ட, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, இந்தியத் திருநாட்டில் தமிழ்நாட்டின் மதுரை மேலூரை ஒட்டிய சிற்றூர் தும்பைப்பட்டியைத் தனது பிறப்பால் தூய்மைப்பட்டி ஆக்கியவர் கக்கன்ஜி. 1909-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் நாளில் சிதைந்த மண்சுவர், செல்லரித்த கூரை வீட்டில், பூசாரி கக்கனுக்கும் தாய் குப்பிக்கும் பிறந்த குழந்தை; படிப்பு கைவிட்டாலும், உழைப்பால் உயர்ந்து, விடுதலைப் போராட்டக் களத்துத் தளபதியாக, சிறைத் தண்டனையும் கசையடியும் பெற்று, மக்களவை உறுப்பினராக, தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சராகத் தொண்டாற்றிய அந்தத் தூயவர். கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்து ஐந்து மகன்களும் ஒரு மகளும் அவருக்கு வாரிசாக வாய்த்தனர்.
வாழ்வில் திருப்பம் - காங்கிரஸ் கட்சிப் பணிகளில் விருப்பம்; தம் வாழ்வின் முன்னோடியாக வரித்துக்கொண்ட தியாகி மதுரை வைத்தியநாத ஐயர் முன்னிலையில் கக்கன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனார். காந்திய வழியில் பொதுத் தொண்டு புரிய விழைந்தார். 1939-ஆம் ஆண்டில் முனைப்பாகச் செயல்பட்டார்.
விடுதலைப் போராட்டம் தீவிரமான போது 'வந்தே மாதரம்' என்று அச்சிட்ட துண்டு அறிக்கைகளை மக்களிடையே வழங்கினார். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவரைக் கைது செய்து 15 நாள்கள் சிறைத்தண்டனை விதித்தனர். விடுதலை ஆனதும் கக்கன் முன்னிலும் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றினார். புதிய இளைஞர்களைக் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்தார். இதைக் கேள்விப்பட்ட அண்ணல் காந்தி, கக்கனைத் தனிநபர் சத்தியாகிரகப் போரின் தலைமைத் தளபதியாக நியமித்தார். இதை அறிந்த அரசு அவரைக் கைது செய்து கடுங்காவல் தண்டனை விதித்தது.
கசையடியும், சிறைக் கொடுமையும் அனுபவித்து வெளியே வந்த மறுநாளே, கக்கனுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பைத் தலைமை வழங்கியது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தால் நாடெங்கும் கலவரம் மூண்டது. காங்கிரஸ் இயக்கத்தை வெள்ளையர் ஆட்சி தடை செய்தது. ஆனால், தம் நண்பர்கள் பழனிசாமி, ராமசாமி ஆகியோருடன் கக்கன் தலைமறைவானார்.
Cette histoire est tirée de l'édition June 18, 2025 de Dinamani Pudukkottai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு உள்பட 18 சேவைகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
January 23, 2026
Dinamani Pudukkottai
சிக்கல் தீர்க்கும் சிரகிரி வேலவன்!
சிரகிரி, சிகரகிரி, மகுடகிரி, புட்பகிரி, சென்னியங்கிரி எனப் பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படும் திருத்தலம் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
2 mins
January 23, 2026
Dinamani Pudukkottai
தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகளுக்கும் ‘இசிஐநெட்’ அறிமுகம்
வாக்காளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகள் மற்றும் தகவல்களை வழங்கும் இசிஐநெட் எனும் புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை தில்லி ஐஐசிடிஇஎம் மாநாட்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.
1 min
January 23, 2026
Dinamani Pudukkottai
WPL யுபியை வீழ்த்தியது குஜராத்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வியாழக்கிழமை வென்றது.
1 min
January 23, 2026
Dinamani Pudukkottai
பாரதத்தை வழிநடத்தும் தலைவர்!
இந்தியா அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது 1947-இல்தான் என்றாலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் இடைக்கால சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிவிட்டார் என்பது அதிகம் பேசப்படாத வரலாறு.
3 mins
January 23, 2026
Dinamani Pudukkottai
நடப்பு சாம்பியன்கள் சின்னர், கீஸ் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான இத்தாலியின் யானிக் சின்னர், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் தங்களது பிரிவில் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
January 23, 2026
Dinamani Pudukkottai
ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலையாளிக்கு ஆயுள் சிறை
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், குற்றவாளி டெட்சுயா யமாகாமிக்கு(45) ஆயுள் சிறை தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
January 22, 2026
Dinamani Pudukkottai
கர்நாடக பேரவை இன்று கூடுகிறது: உரையாற்ற ஆளுநர் மறுப்பு
கர்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடர் வியாழக்கிழமை தொடங்கும் நிலையில், மாநில காங்கிரஸ் அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையை வாசிக்கப் போவதில்லை என்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மறுப்பு தெரிவித்துவிட்டதாக புதன்கிழமை தகவல்கள் வெளியாகின.
1 min
January 22, 2026
Dinamani Pudukkottai
கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் மீண்டும் உறுதி
கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் மீண்டும் உறுதி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்குப் படை பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
1 mins
January 22, 2026
Dinamani Pudukkottai
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக
பியூஷ் கோயல்-டி.டி.வி.தினகரன் சந்திப்பில் உடன்பாடு
1 mins
January 22, 2026
Translate
Change font size

