Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

கண்ணியக் காவலர் கக்கன்ஜி!

Dinamani Pudukkottai

|

June 18, 2025

மதுரை அரசு மருத்துவமனையில் கக்கன்ஜி சிகிச்சை பெற்றபோது அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவரைச் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். "என்ன உதவி உங்களுக்கு வேண்டும்?" என்று எம்.ஜி.ஆர். கேட்டபோது, "உங்கள் அன்பு மட்டும் போதும்" என்றார் கக்கன்ஜி.

- புலவர் வே.பதுமனார்

வெள்ளையர் ஆட்சியில் அடிமைப்பட்ட, ஜாதி ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த, இந்தியத் திருநாட்டில் தமிழ்நாட்டின் மதுரை மேலூரை ஒட்டிய சிற்றூர் தும்பைப்பட்டியைத் தனது பிறப்பால் தூய்மைப்பட்டி ஆக்கியவர் கக்கன்ஜி. 1909-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 18-ஆம் நாளில் சிதைந்த மண்சுவர், செல்லரித்த கூரை வீட்டில், பூசாரி கக்கனுக்கும் தாய் குப்பிக்கும் பிறந்த குழந்தை; படிப்பு கைவிட்டாலும், உழைப்பால் உயர்ந்து, விடுதலைப் போராட்டக் களத்துத் தளபதியாக, சிறைத் தண்டனையும் கசையடியும் பெற்று, மக்களவை உறுப்பினராக, தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சராகத் தொண்டாற்றிய அந்தத் தூயவர். கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்து ஐந்து மகன்களும் ஒரு மகளும் அவருக்கு வாரிசாக வாய்த்தனர்.

வாழ்வில் திருப்பம் - காங்கிரஸ் கட்சிப் பணிகளில் விருப்பம்; தம் வாழ்வின் முன்னோடியாக வரித்துக்கொண்ட தியாகி மதுரை வைத்தியநாத ஐயர் முன்னிலையில் கக்கன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஆனார். காந்திய வழியில் பொதுத் தொண்டு புரிய விழைந்தார். 1939-ஆம் ஆண்டில் முனைப்பாகச் செயல்பட்டார்.

விடுதலைப் போராட்டம் தீவிரமான போது 'வந்தே மாதரம்' என்று அச்சிட்ட துண்டு அறிக்கைகளை மக்களிடையே வழங்கினார். இதை அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் அவரைக் கைது செய்து 15 நாள்கள் சிறைத்தண்டனை விதித்தனர். விடுதலை ஆனதும் கக்கன் முன்னிலும் தீவிரமாகக் கட்சிப் பணியாற்றினார். புதிய இளைஞர்களைக் காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்தார். இதைக் கேள்விப்பட்ட அண்ணல் காந்தி, கக்கனைத் தனிநபர் சத்தியாகிரகப் போரின் தலைமைத் தளபதியாக நியமித்தார். இதை அறிந்த அரசு அவரைக் கைது செய்து கடுங்காவல் தண்டனை விதித்தது.

கசையடியும், சிறைக் கொடுமையும் அனுபவித்து வெளியே வந்த மறுநாளே, கக்கனுக்கு மதுரை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பைத் தலைமை வழங்கியது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தால் நாடெங்கும் கலவரம் மூண்டது. காங்கிரஸ் இயக்கத்தை வெள்ளையர் ஆட்சி தடை செய்தது. ஆனால், தம் நண்பர்கள் பழனிசாமி, ராமசாமி ஆகியோருடன் கக்கன் தலைமறைவானார்.

MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தமிழ்நாடுடன் 'டிரா' செய்தது நாகாலாந்து

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் மோதிய ஆட்டம் செவ்வாய்க்கிழமை 'டிரா' ஆனது.

time to read

1 min

October 29, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு

வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

அரையிறுதி: இன்று சந்திக்கும் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து

குவாஹாட்டி, அக். 28: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள், புதன்கிழமை (அக். 29) மோதுகின்றன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Pudukkottai

புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Pudukkottai

லாப நோக்க விற்பனையால் சரிந்த பங்குச் சந்தை

லாப நோக்க விற்பனை மற்றும் ஆசிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Pudukkottai

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்...

இந்தக் காலத்தில் திமுகவின் பொதுக் கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

time to read

3 mins

October 29, 2025

Dinamani Pudukkottai

மகிழ்ச்சியைக் கூட்டும் மனநலன்!

நரம்பியல் ஆய்வுகள் நம்மில் நான்கு பேரில் ஒருவர் மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றன. உடல் நலத்தைப் போலவே மனநலன் குறித்தும் பேச வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. உலக அளவில் நம்மில் 8 பேரில் ஒருவர்தான் நல்ல மனநலனுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

time to read

2 mins

October 28, 2025

Dinamani Pudukkottai

30 நிமிட இடைவெளியில் போர் விமானம், ஹெலிகாப்டரை இழந்தது அமெரிக்கா

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பலில் இருந்த ஒரு போர் விமானமும் ராணுவ ஹெலிகாப்டரும், வெறும் 30 நிமிஷ இடைவெளியில் தனித்தனியாக விபத்துக்குள்ளாகி தென் சீன கடல் பகுதியில் விழுந்தன.

time to read

1 min

October 28, 2025

Dinamani Pudukkottai

அன்புள்ள ஆசிரியருக்கு...

மேடைகளில் பேசத் தொடங்கும் காலத்தில் தயக்கம் ஏற்படுவது இயல்புதான் (‘தயக்கம் வேண்டாம்...’- துணைக் கட்டுரை- பெ. சுப்ரமணியன், 20.10.25). பள்ளிகளில் பல வகைப் போட்டிகள் நடத்துவதன் மூலம் தயக்கம் தவிர்க்கப் பயிற்றுவிக்கப்படுகிறது. மனிதர்களுக்கிடையே பிரச்னைகள் தோன்றுவது தவிர்க்க இயலாதது. ஆனால், வெளிப்படையான விவாதம், மனம் திறந்த கலந்துரையாடல் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும். நல்ல நூல்களை வாசிப்பதும், நல்ல சிந்தனைக்குப் பழக்கப்படுவதுமே மனம் திறந்த கலந்துரையாடலுக்கும் கருத்தொற்றுமைக்கும் மன இருள் அகன்று அன்பு ஒளிவீசவும் வழிகோலும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதைவிட மகிழ்ச்சியாக வாழ்வதற்கே என்பதை மனதில் கொண்டால் ஆலம் விதைக்கு சுவர் வழிவிடாது.

time to read

1 min

October 28, 2025

Dinamani Pudukkottai

தமிழில் மட்டுமே பேசுவோம்!

மாணவர்களிடையே ‘மாபெரும் தமிழ் கனவு' என்ற தலைப்பில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பேசியபோது ஒரு செய்தியை வலியுறுத்திக் கூறினேன். அது ‘தமிழ் தெரிந்தவர்களிடம் தமிழிலேயே பேசுங்கள்' என்பதுதான்.

time to read

3 mins

October 28, 2025

Translate

Share

-
+

Change font size