Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

சுற்றுச்சூழலும் தொழில் வளர்ச்சியும்...!

Dinamani Chennai

|

April 12, 2025

தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்போதுமே முரண்ான பொருத்தம்தான். ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்தால்தான் மற்றொன்றைப் பாதுகாக்க முடியும்.

தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்போதுமே முரண்ான பொருத்தம்தான். ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்தால்தான் மற்றொன்றைப் பாதுகாக்க முடியும். அந்த வகையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே 400 ஏக்கர் நிலம் தொடர்பான விவகாரம் தொழில் வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையே சிக்கிக் கொண்டு பெரும் போராட்டக் களத்தையும், நீதிமன்றத்தில் வழக்கையும் எதிர்கொண்டிருக்கிறது.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அருகே காஞ்சா கட்சிபெளலி என்ற இடத்தில் உள்ள 400 ஏக்கர் வன நிலத்தில் உள்ள மரங்களை தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்காக மாநில அரசு அப்புறப்படுத்த முடிவு செய்தது. இந்த நிலம் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமானது என மாணவர்களும், அரசுக்குச் சொந்தமானது என மாநில அரசும் உரிமை கோரியதால் பிரச்னை ஏற்பட்டது.

கடந்த மாத இறுதியில் 50-க்கு மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை அந்த வனப் பகுதி நிலத்தைச் சீரமைப்பதற்காக மாநில அரசு அனுப்பியதைத் தொடர்ந்து போராட்டம் வெடித்தது. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

வனப் பரப்பு அழிக்கப்படும் விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், காஞ்சா கட்சிபெளலி வனப் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது. வனப் பகுதியில் மரங்களை அவசர அவசரமாக வெட்டுவதற்கான காரணத்தை விளக்குவதற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், கள நிலவர அறிக்கையை நேரில் சென்று ஆய்வு செய்து சமர்ப்பிக்க மத்திய குழு ஒன்றையும் நியமித்தது.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

அரசமைப்பின் புனிதத்தன்மையை நிலைநிறுத்தும் வழக்குரைஞர் சங்கம் - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதிலும், அரசமைப்புச் சட்டத்தின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதிலும் வழக்குரைஞர் சங்கம் மிக முக்கிய பங்கை வகிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

அரிய புவி காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.7,280 கோடியில் திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிய புவி காந்தங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7,280 கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 mins

November 27, 2025

Dinamani Chennai

மெரீனாவில் சாலையோர வியாபாரம்: வனத் துறை முதன்மைச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆஜராக உத்தரவு

மெரீனா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத விவகாரத்தில் வரும் டிச.10-ஆம் தேதி சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

நவ. 29-இல் செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கை

தமிழகத்தில் நவ.29-ஆம் தேதி (சனிக்கிழமை) திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிபலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்குச் 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புதன்கிழமை (நவ. 26) காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். நீதி வணிகமயம் ஆகக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டார்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவுக்கு இதுவரை இல்லாத தோல்வி - தென்னாப்பிரிக்காவுக்கு வரலாற்று வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை படுதோல்வியைச் சந்தித்தது.

time to read

1 mins

November 27, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

கடந்த நவ.24-ஆம் தேதி அனைத்து சமூக ஊடங்களிலும் பரவலாகப் பேசப்பட்டது மிகப் பெரிய ஆளுமையின் மறைவுச் செய்தி.

time to read

2 mins

November 27, 2025

Dinamani Chennai

விண்ணவெளித் துறையில் தனியார்மயம் பாதிப்பை ஏற்படுத்தாது

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் விண்வெளித் துறையில் தனியார்மயம் என்பது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு: அனுமதி கோரி தவெகவினர் மனு

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் வரும் டிச.5-ஆம் தேதி மக்கள் சந்திப்பு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு அனுமதி கோரி காவல் துறை தலைவரிடம் அந்தக் கட்சியினர் புதன்கிழமை மனு அளித்தனர்.தமிழகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில், புதுச்சேரியில் தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளார்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

ரயில்களில் ‘ஹலால்’ இறைச்சி உணவு மட்டுமே வழங்கப்படுவதாக புகார் - மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

ரயில் பயணிகளுக்கான அசைவ உணவில் 'ஹலால்' இறைச்சி (இஸ்லாமிய வழிமுறைகளின்படி வெட்டப்பட்டவை) உணவுகள் மட்டுமே வழங்கப்படுவதாக அளிக்கப்பட்ட புகாரில் ரயில்வே அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

time to read

1 min

November 27, 2025

Translate

Share

-
+

Change font size