Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

சுற்றுச்சூழலும் தொழில் வளர்ச்சியும்...!

Dinamani Chennai

|

April 12, 2025

தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்போதுமே முரண்ான பொருத்தம்தான். ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்தால்தான் மற்றொன்றைப் பாதுகாக்க முடியும்.

தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்போதுமே முரண்ான பொருத்தம்தான். ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்தால்தான் மற்றொன்றைப் பாதுகாக்க முடியும். அந்த வகையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே 400 ஏக்கர் நிலம் தொடர்பான விவகாரம் தொழில் வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையே சிக்கிக் கொண்டு பெரும் போராட்டக் களத்தையும், நீதிமன்றத்தில் வழக்கையும் எதிர்கொண்டிருக்கிறது.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அருகே காஞ்சா கட்சிபெளலி என்ற இடத்தில் உள்ள 400 ஏக்கர் வன நிலத்தில் உள்ள மரங்களை தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்காக மாநில அரசு அப்புறப்படுத்த முடிவு செய்தது. இந்த நிலம் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமானது என மாணவர்களும், அரசுக்குச் சொந்தமானது என மாநில அரசும் உரிமை கோரியதால் பிரச்னை ஏற்பட்டது.

கடந்த மாத இறுதியில் 50-க்கு மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை அந்த வனப் பகுதி நிலத்தைச் சீரமைப்பதற்காக மாநில அரசு அனுப்பியதைத் தொடர்ந்து போராட்டம் வெடித்தது. சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

வனப் பரப்பு அழிக்கப்படும் விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், காஞ்சா கட்சிபெளலி வனப் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது. வனப் பகுதியில் மரங்களை அவசர அவசரமாக வெட்டுவதற்கான காரணத்தை விளக்குவதற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், கள நிலவர அறிக்கையை நேரில் சென்று ஆய்வு செய்து சமர்ப்பிக்க மத்திய குழு ஒன்றையும் நியமித்தது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்வு

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை, புதிய அந்நிய முதலீட்டு வரவு ஆகியவற்றால் உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்ப, இந்திய பங்குச் சந்தைகள் மூன்று நாள் சரிவுக்குப் பிறகு புதன்கிழமை அனைத்துத் துறைகளிலும் வலுவாக மீண்டன.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

தில்லி குண்டுவெடிப்பு: 7-ஆவது நபர் கைது

தற்கொலை பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தவர்

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: அதிமுக பிரமுகர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதிமுக பிரமுகரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

பள்ளி ஆசிரியர் நியமன முறைகேடு 'மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் ஆஜராகாவிட்டால் ஜாமீன் ரத்து'

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாவிட்டால், அவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைப்பு

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை காஸாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

விஜய்யுடன் முன்னாள் அமைச்சர் கே.

time to read

2 mins

November 27, 2025

Dinamani Chennai

தொடர் போராட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள்: காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் கெடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் (எஸ்ஐஆர்) வேலை பளு அதிகரிப்பதாக கூறி, கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (பிஎல்ஓ) மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு வங்க காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

‘சமவேலைக்கு சம ஊதியம்’ கோரி செவிலியர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு

பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் வரும் டிசம்பர் 18-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

time to read

1 min

November 27, 2025

Dinamani Chennai

ரயில்களில் ‘ஹலால்’ இறைச்சி உணவு மட்டுமே வழங்கப்படுவதாக புகார்

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

time to read

1 min

November 27, 2025

Translate

Share

-
+

Change font size