Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

புதியதோர் நகரம் செய்வோம்!

Dinamani Virudhunagar

|

May 21, 2025

பொது இடங்களைப் பொருத்தவரை மிகவும் மோசமான பிரச்னைகளில் ஒன்று, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களின் ஊடுருவல். நடைபாதைகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் சில நேரங்களில் சாலைகளிலும் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

- கட்டுரையாளர்: முன்னாள் காவல் துறைத் தலைவர்.

பெயர்தல் தொன்றுதொட்டு நடந்து வரும் நிகழ்வு. பல காரணங்களுக்காக மக்கள் இடம்விட்டு இடம் போகிறார்கள். முன்பெல்லாம் பஞ்சம் பிழைக்க கிராமங்களிலிருந்து பட்டணம் வருவார்கள். இப்போது பெருகி வரும் பொருளாதாரப் பயன்களைப் பெறவும் வசதிகளை அடையவும் மக்கள் நகரங்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க நகரங்களும் விரிவடைகின்றன. நகரமயமாக்கல் குறியீட்டில் 58 சதவிகிதமாக தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.

இந்தியா பல்வேறு துறைகளில் ஆதிக்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கணினி தொழில்நுட்பம், மருத்துவம், மருந்து உற்பத்தி, பாதுகாப்பு, விண்வெளி, ஆட்டோ மொபைல் உற்பத்தி போன்ற பல தொழில்களிலும் துறைகளிலும் அற்புதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த எழுச்சிமிக்க முன்னேற்றத்தின் விளைவாக சுற்றுலாத் துறை சீராக வளர்ந்துள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பார்வையாளர்கள் நமது அழகிய நிலப்பரப்புகளையும், காடுகளையும் பாரம்பரியம் மிக்க புராண தலங்களையும் காண வருகிறார்கள். மேலும், நவீன இந்தியாவை ஆராய முயல்கிறார்கள். இருப்பினும், அனைத்து உற்சாகமான எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும், பிம்பமும் பொது இடங்களில் காலடி எடுத்து வைத்த அடுத்த நிமிடமே சிதைந்துவிடும்.

இலங்கை போன்ற ஏழை அண்டை நாடுகளுடனும், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள வியத்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா போன்ற பிற நாடுகளுடனும் ஒப்பிடும்போதுகூட, நமது நாட்டின் பொது உள்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு உரிய வேகத்தை எட்டவில்லை. இதற்கு நமது மக்களில் பெரும்பகுதியினரிடையே அக்கறையின்மை மற்றும் குடிமை உணர்வு இல்லாதது ஒரு காரணம்; நன்கு வரையப்பட்ட கொள்கைகளை அமல்படுத்துவதில் அரசாங்கத்தின் அணுகுமுறை மெத்தனமாக உள்ளது இன்னொரு காரணம்.

பொது இடங்களைப் பொருத்தவரை மிகவும் மோசமான பிரச்னைகளில் ஒன்று, அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களின் ஊடுருவல். நிர்வாகத்துக்கு இது ஒரு சவாலாக உருவெடுத்துள்ளது. நடைபாதைகள், கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் சில நேரங்களில் சாலைகளிலும் கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

MÁS HISTORIAS DE Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

ஆசிய இளையோர் கபடியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம்

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ், கார்த்திகா ரமேஷ் ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

time to read

1 min

October 27, 2025

Dinamani Virudhunagar

தீபாவளி மலர்கள் 2025

கலைமகள் தீபாவளி மலர் 2025கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன்; பக்.222; ரூ.200, சென்னை-600 028, 044-2498 1699.

time to read

5 mins

October 27, 2025

Dinamani Virudhunagar

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது

பட்டுக்கோட்டை அருகே ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

October 27, 2025

Dinamani Virudhunagar

மழைக்கால விபத்துகளைத் தவிர்ப்போம்!

தமிழகத்தில் தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாத இறுதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால் சராசரி மழையின் அளவைவிட 27% அதிக மழைப் பொழிவு இருந்தது. இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப் பருவமழையின் அளவு இயல்பை விட 8% அதிகம் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித் துள்ளது. இவற்றின் அடிப்படையில், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை யின் அளவும் சராசரி அளவைவிட அதிக அளவில் பெய்யக்கூடும்.

time to read

2 mins

October 27, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

தடைக்குப் பின்னால்...

ஹைதராபாத்தில் குழந்தை மருத்துவராகப் பணி புரியும் மருத்துவர் சிவரஞ்சனியின் எட்டு ஆண்டு காலப் போராட்டம் காரணமாக, இந்திய உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் ஆணையம் 'போலி ஓ.ஆர்.எஸ்.' பானங்களை சந்தையில் விற்கத் தடைசெய்துள்ளது. காஜீபுரத்தில் தயாரிக்கப்பட்ட தரமில்லாத இருமல் மருந்து பல குழந்தைகளை உயிர்ப்பலி வாங்கியிருப்பதுதான் ஆணையத்தை இந்த நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.

time to read

1 mins

October 26, 2025

Dinamani Virudhunagar

ஏ.ஐ. தரும் வேலைத் தளர்ச்சி

'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் 'ஏ.ஐ.' எவ்வளவு வேகத்தில் அனைத்துத் துறைகளிலும் இப்போது ஊடுருவிவிட்டதோ, அதே வேகத்தில் அது தந்திருக்கும் புதிய வார்த்தையும் உலகெங்கும் இப்போது பரவி வருகிறது. அதுதான் 'ஒர்க் ஸ்லாப்' அல்லது 'ஏ.ஐ. ஸ்லாப்'. இதன் பொருள் ஏ.ஐ-யினால் வரும் வேலைத் தளர்ச்சி!

time to read

1 min

October 26, 2025

Dinamani Virudhunagar

'விஞ்ஞான ரத்னா' விருது: மறைந்த வானியற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் தேர்வு

விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ விருதுகளும் அறிவிப்பு

time to read

1 min

October 26, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

அறம் கூறும் புறம்...!

அறம் எவ்வாறு உருவானது ...? மனிதர்கள் தோன்றிய போதே அவருடன் ஒட்டிப் பிறந்ததா அறம்? அன்று. வாழ்வியல் சூழல் களால், மனிதர்களின் மனத்தில் தோன்றிய உயர்வான சிந்தனையே அறம். இந்த சமூ கத்தை முன்னோக்கிச் செலுத்துகிற கால சக்கரம் அறம்.

time to read

1 mins

October 26, 2025

Dinamani Virudhunagar

எழுதிக் கொண்டே இருப்பேன்...

கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்காக, என்னை முன்னாள் முதல்வர் கருணாநிதியே வெகுவாகப் பாராட்டினார். முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சங்கர் தயாள் சர்மா, ஆர். வெங்கடராமன், முன்னாள் ஆளுநர் சி. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். அவசரநிலை பிரகடனத்தின்போது, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை இந்திரா காந்தி எவ்வாறு தலைகீழாக மாற்றி நாட்டை அடிமையாக்கினார் என்பதைப் பற்றிய ஒரு நூலை நான் எழுதினேன். அந்த நூலை 1992-இல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் வெளியிட்டு, என்னைப் பாராட்டினார். அம்பேத்கர் பித்தனான நான், 'அம்பேத்கர் எவ்வாறு அரசியல் சாசனத்தை உருவாக்கினார்' என்பதைப் பற்றிய ஆங்கில நூலை எழுதினேன். அதை எல். கே. அத்வானி வெளியிட்டார். 98 வயதிலும் நான் பல்வேறு பழைய விஷயங்கள், உண்மைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். முக்கியப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், நாட்டை வெகு விரைவில் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்கு உறுதுணையாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்” என்கிறார் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே.

time to read

1 min

October 26, 2025

Dinamani Virudhunagar

நல்லாசானாய் - வழிகாட்டியாய்!

பன்னூல் ஆசிரியர் எம்.ஆர்.எம். அப்துற் றஹீமை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவருடைய எழுத்துகள் இன்றைய தலைமுறைக்கும் புரியும்.

time to read

2 mins

October 26, 2025

Translate

Share

-
+

Change font size