Intentar ORO - Gratis
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
Dinamani Thoothukudi
|August 29, 2025
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தமிழர்களுக்கு பெருமைக்குரிய தருணம்.
'இண்டி' கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் உறுதியாகி உள்ளது. இது சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல். எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளன என்று 'இண்டி' கூட்டணி தரப்பு தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்; பாஜகவில் 40 ஆண்டு காலமாக ஊறித் திளைத்தவர் சிபிஆர் என்று திமுக விமர்சிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்களில் இருந்துதானே ஒருவரை நியமிக்க முடியும் என்பதை நாம் எளிதில் மறந்து விடக்கூடாது. 2002-ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ் பின்னணியுடைய ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத்தைக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச் செய்தபோது, கொள்கை ஞானோதயம் திமுகவுக்கு ஏற்படாதது ஏன்?
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தமிழர்கள் வாக்களிப்பது ஒரு சித்தாந்த மோதல் என்று அவர்கள் தரப்பு சொல்வதை, எந்தவொரு தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும், தமிழ்நாட்டின் மதிப்பீடுகள் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை கொண்டவர்கள் ஒரு தமிழனின் உயர்வைத் தட்டிப் பறிக் கிற தேர்தல் போட்டியை ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது.
Esta historia es de la edición August 29, 2025 de Dinamani Thoothukudi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
பிள்ளைப்பேறு அருளும் பாண்டி முனீஸ்வரர்
மதுரையில் பிரபலமான கோயில்களுள் ஒன்று, பாண்டி முனீஸ்வரர் கோயில்.
1 mins
January 09, 2026
Dinamani Thoothukudi
ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமிய திட்டம்: எல்ஐசி அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடர்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Thoothukudi
டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு
வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 09, 2026
Dinamani Thoothukudi
சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.
1 min
January 09, 2026
Dinamani Thoothukudi
தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்
அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
January 09, 2026
Dinamani Thoothukudi
வாஸ்து குறை போக்கும் பைரவேஸ்வரர்
சிவபெருமானின் எல்லையற்ற அருட்வடிவங்களில் மிகச் சிறப்பாகப் போற்றப்பெறுவது ஸ்ரீ பைரவர் வடிவம்.
1 mins
January 09, 2026
Dinamani Thoothukudi
வாலிபால், பென்காக் சிலாட்டில் தமிழகத்துக்கு தங்கம்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (பீச் கேம்ஸ்) வாலிபால் மற்றும் பென்காக் சிலாட் ஆகியவற்றில் தமிழகத்துக்கு 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
2 mins
January 09, 2026
Dinamani Thoothukudi
காலமானார் காந்தியவாதி மா.வன்னிக்கோன்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தின் நிறுவனரும், காந்தியவாதியுமான மா.
1 min
January 09, 2026
Dinamani Thoothukudi
தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.
1 min
January 09, 2026
Dinamani Thoothukudi
தொட்டனைத் தூறும் மணற்கேணி...
ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
2 mins
January 09, 2026
Translate
Change font size
