Facebook Pixel மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்? | Dinamani Thoothukudi - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?

Dinamani Thoothukudi

|

July 28, 2025

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.

- அறச்சலூர் இரா.செல்வம்

ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.

மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.

55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.

மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.

MÁS HISTORIAS DE Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச் சலுகை: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச் சலுகை அளிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

February 24, 2026

Dinamani Thoothukudi

தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்

இறுதிப்பட்டியல் வெளியீடு- 74 லட்சம் பேர் நீக்கம்

time to read

1 mins

February 24, 2026

Dinamani Thoothukudi

இது ஓர் அதிசயத் தேர்தல்!

சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதுபோல, இது ஓர் அதிசயத் தேர்தல் என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.

time to read

1 mins

February 24, 2026

Dinamani Thoothukudi

பாதுகாப்பும் பயணமும்...

உலகில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது பெரிய ரயில்வே துறையாக இந்திய ரயில்வே திகழ்கிறது.

time to read

2 mins

February 24, 2026

Dinamani Thoothukudi

'கியூட்' நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெறுவதற்கான 'க்யூட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.

time to read

1 min

February 24, 2026

Dinamani Thoothukudi

தேசிய சீனியர் ஆடவர் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்

இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பு சார்பில் 72-ஆவது சீனியர் தேசிய ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, வதோதராவில் உள்ள சமா இண்டோர் காம்ப்ளக்ஸில், பிப்.

time to read

1 min

February 24, 2026

Dinamani Thoothukudi

தென் தமிழகத்தில் மார்ச் 1 வரை மழை வாய்ப்பு

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

February 24, 2026

Dinamani Thoothukudi

நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடு

நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

time to read

2 mins

February 24, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மார்ச் 16-க்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வரும் மார்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

February 24, 2026

Dinamani Thoothukudi

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கர்நாடகம் - ஜம்மு & காஷ்மீர் மோதல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம் - ஜம்மு & காஷ்மீர் மோதும் இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.

time to read

1 min

February 24, 2026

Translate

Share

-
+

Change font size