Facebook Pixel மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்? | Dinamani Thoothukudi - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?

Dinamani Thoothukudi

|

July 28, 2025

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.

- அறச்சலூர் இரா.செல்வம்

ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.

மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.

55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.

மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திமுக கூட்டணியில் குழப்பம்; அதிமுக கூட்டணியில் சுமுகம்

தில்லியில் எடப்பாடி கே. பழனிசாமி பேட்டி

time to read

1 min

March 04, 2026

Dinamani Thoothukudi

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்

கூடுதல் படைகளை அனுப்புகிறது அமெரிக்கா

time to read

2 mins

March 03, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இளைஞர்கள் புத்தக வாசிப்புக்கு தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டும்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

time to read

1 mins

March 03, 2026

Dinamani Thoothukudi

மேய்ச்சல் நிலம் மேய்ப்பதற்கே...

'மேய்ச்சல் நிலம் மற்றும் கிடைக்காரர்கள் சர்வதேச ஆண்டு 2026' என அறிவிக்கும் தீர்மானம் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் 15.03.2022 அன்று நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

March 03, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இறந்தவர்களுக்கு வரும் தபால்கள்: விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

இறந்தவர்களுக்கு வரும் தபால்கள், பார்சல்களை இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் கொடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தபால் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

March 03, 2026

Dinamani Thoothukudi

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதவிடாய் பருவ பெண்களை அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் முடிவு செய்துள்ளது.

time to read

1 min

March 03, 2026

Dinamani Thoothukudi

கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு; அனைவரையும் அங்கீகரிக்க வேண்டும்

'கிரிக்கெட் என்பது அணி விளையாட்டு.

time to read

1 min

March 03, 2026

Dinamani Thoothukudi

கைக்குலுக்கலைத் தவிர்ப்பது விளையாட்டுக்கு நல்லதல்ல

'கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம்.

time to read

1 min

March 03, 2026

Dinamani Thoothukudi

எல்லை வேலி அமைக்க 105 ஏக்கர் நிலம்: மத்திய அரசுக்கு ஒதுக்க மேற்கு வங்கம் முடிவு

நாட்டின் எல்லையில் வேலி அமைப்பது, எல்லைச் சாவடிகள் அமைப்பது போன்ற பணிகளுக்காக 105 ஏக்கர் நிலத்தை மத்திய அரசுக்கு ஒதுக்க மேற்கு வங்க மாநில அரசு முதல் கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.

time to read

1 min

March 03, 2026

Dinamani Thoothukudi

நீதிமன்ற உத்தரவில் யாரும் தலையிட முடியாது

உயர்நீதிமன்றம் கருத்து

time to read

2 mins

March 03, 2026

Translate

Share

-
+

Change font size