Facebook Pixel மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்? | Dinamani Thoothukudi - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?

Dinamani Thoothukudi

|

July 28, 2025

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.

- அறச்சலூர் இரா.செல்வம்

ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.

மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.

55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.

மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா

அலிசா ஹீலி, பெத் மூனி ஆதிக்கம்

time to read

1 mins

March 02, 2026

Dinamani Thoothukudi

25 தொகுதிகளை ஏற்க முடியாது

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை திமுக ஏற்றுக் கொண்டால்தான் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு நகரும் என்று தமிழகத்துக்கான அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தில்லியில் தெரிவித்தார்.

time to read

1 min

March 02, 2026

Dinamani Thoothukudi

கமேனி படுகொலையைக் கண்டித்து காஷ்மீரில் போராட்டம்

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

time to read

1 min

March 02, 2026

Dinamani Thoothukudi

ஈரானுடன் புதிய வணிக ஒப்பந்தங்களைத் தவிர்க்கவும்

உறுப்பினர்களுக்கு இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்

time to read

1 mins

March 02, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தாக்குதலை அதிகரித்தால்... ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரான் தனது தாக்குதலை அதிகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'இதை மீறி ஈரான் தாக்குதலை அதிகரித்தால் முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒரு தாக்குதல் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளும்' என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

March 02, 2026

Dinamani Thoothukudi

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

time to read

2 mins

March 02, 2026

Dinamani Thoothukudi

தீக்குளித்து இறந்தவரின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஆறுதல்

திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பூரணசந்திரன் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினார்.

time to read

1 min

March 02, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சென்னை - ஓடிஸா ஆட்டம் 'ட்ரா'

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

March 02, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும்: பிரதமர் மோடி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

time to read

1 min

March 02, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

திமுக கூட்டணியில் ஐயுஎம்எல், மமகவுக்கு தலா 2 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

March 01, 2026

Translate

Share

-
+

Change font size