Intentar ORO - Gratis
பெங்களூரு நெரிசல் துயர சம்பவம்: ஆட்டமும் அலட்சியமும்!
Dinamani Pudukkottai
|June 06, 2025
ராயல் சேலஞ்ச் சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 ஆண்டுகால ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் 11 உயிர்களை அகாலமாகப் பறித்திருக்கிறது.
பெங்களூரு, ஜூன் 5:
தகுந்த திட்டமிடல் இல்லாமல், இரவோடு இரவாக கர்நாடக அரசு அறிவித்த விதான சௌதா வளாக பாராட்டு விழாவும், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்சிபி அணிக்குப் பாராட்டு விழாவும் நிலைமையை மோசமாக்கின.
விடிய, விடிய நடந்த ரசிகர்களின் கொண்டாட்டங்கள், பொது இடங்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள், ஆர்ப்பரித்த ரசிகர்கள், கன்னடக் கொடி மற்றும் ஆர்சிபி கொடிகளுடன் வாகனங்களில் பவனி வந்தவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தி வந்தனர். இதனால் பிற பாதுகாப்புப் பணிக்குப் போதுமான காவலர்களை ஈடுபடுத்த முடியாமல் நகர காவல் துறை திணறியது.
இந்நிலையில், புதன்கிழமை காலை முதலே கொண்டாட்டங்கள், பாராட்டு விழாக்கள் நடைபெறும் இடங்களை நோக்கி ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.
வாகனங்களைத் தவிர்க்குமாறு காவல் துறை கேட்டுக்கொண்டதால், மெட்ரோ ரயில்களில் ரசிகர்கள் படையெடுத்தனர். இதனால் மெட்ரோ ரயில்கள் நிரம்பி வழிந்தன. இளைஞர்களின் ஆரவாரக் கூச்சல், முழக்கங்களால் பிற பயணிகளால் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியவில்லை.
பேருந்துகளிலும் மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து காவல் துறை, விதான சௌதாவில் இருந்து அம்பேத்கர் வீதி வழியாக சின்னசாமி மைதானம் வரை நடக்கவிருந்த கிரிக்கெட் வீரர்களின் பேருந்து உலா நிகழ்ச்சியை ரத்து செய்தது.
Esta historia es de la edición June 06, 2025 de Dinamani Pudukkottai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
October 11, 2025
Dinamani Pudukkottai
பரிசளிப்பில் அரசியல்: அமெரிக்க அதிபர் மாளிகை
அமைதிக்கான நோபல் பரிசளிப்பதில் தேர்வுக் குழு அரசியல் செய்வதாக அமெரிக்க அதிபர் மாளிகை விமர்சித்துள்ளது.
1 min
October 11, 2025
Dinamani Pudukkottai
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Pudukkottai
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Pudukkottai
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Pudukkottai
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் கைது
சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
1 min
October 10, 2025

Dinamani Pudukkottai
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025

Dinamani Pudukkottai
கண்ணீர்க் கடலில் காஸா!
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் நிபந்தனைகளை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, விரைவில் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என்று நம்பிக்கை பிறந்திருக்கிறது. காஸாவில் அமைதி முயற்சியில் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில் பிணைக் கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றன. நீடித்த மற்றும் நியாயமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கிறது. இஸ்ரேலியக் கைதிகளை படிப்படியாக விடுவிப்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
2 mins
October 09, 2025

Dinamani Pudukkottai
விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய 'ஆபரேஷன் சிந்துார்'
'மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போர் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது' என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தார்.
1 min
October 09, 2025
Dinamani Pudukkottai
பங்குச் சந்தையின் நான்கு நாள் உயர்வுக்கு முடிவு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முக்கிய பங்குகளின் விற்பனை காரணமாக, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவற்றின் நான்கு நாள் உயர்வு புதன்கிழமை முடிவுக்குவந்தது.
1 min
October 09, 2025
Translate
Change font size