Facebook Pixel ஆதரித்தால் போதும் அடியேனை... | Dinamani Dharmapuri - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

ஆதரித்தால் போதும் அடியேனை...

Dinamani Dharmapuri

|

March 03, 2025

இடம்பெயரும் தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்தால் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்நிலையில் முன்னேறிய மாநிலங்களில் நபர் பற்றாக்குறை ஏற்படும், வளர்ச்சிப் பணிகள், அத்தியாவசியப் பணிகள் முடங்கும்.

- ஆர்.நடராஜ்

வீட்டில் தினசரி வேலைகளைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். யாரோ ஓர் ஏழைப் பெண் சில மணி நேரம் வீட்டு வேலை செய்துவிட்டுப் போகிறார் என்று அந்த அத்தியாவசிய வேலைக்கு மதிப்பு கொடுப்பதில்லை. கரோனா தாக்கியபோது சமூக இடைவெளியைக் காக்க வேண்டிய கட்டத்தில் வீட்டு வேலைப் பணியாளரும் வெளியில் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது தான் பலருக்கு அன்றாட வீட்டு வேலையின் மதிப்பு புரிந்தது.

அண்ணாவின் திரைக்கதையில் 1949-ஆம் வருடம் வெளிவந்த 'வேலைக்காரி' என்ற திரைப்படம், வீட்டு வேலை செய்பவர்களின் நிலையை நிதர்சனமாக சித்தரித்தது. வீட்டில் உள்ளவர்களின் ஏளனப் பேச்சு, ஏசுதலுக்கு உட்படுதல், குனிந்து நிமிர்ந்தால் வீட்டில் உள்ள ஆண்களின் வக்கிரப் பார்வையை தவிர்க்க கூனிக் குறுகுதல் போன்ற எண்ணற்ற சங்கடங்களைச் சகித்து, வயிற்றைக் கழுவ உழைக்கும் இந்த வர்க்கத்தினர் பற்றி சமுதாய விழிப்புணர்வு கொடுத்த படம் 'வேலைக்காரி'. கல்கி கிருஷ்ணமூர்த்தி தனது கல்கி இதழில், 'சமூகத்தை சீர்திருத்த வந்த ஒரு சிறந்த படம்' என்று விமர்சனம் எழுதினார். சட்டம் ஒரு இருட்டறை. அதிலே வக்கீலின் வாதம் ஒரு விளக்கு. ஆனால், அது ஏழைக்கு எட்டாத விளக்கு என்பன போன்ற வசனங்கள் மக்களை ஈர்த்தன.

சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் சூரிய காந்த், உஜ்ஜல் பூயான் அமர்வில், வீட்டுவேலை செய்பவர் சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் போது வீட்டு வேலை செய்பவர்களுக்கு தக்க சட்ட பாதுகாப்பு இல்லாத பிரச்னை 1959 - இல் இருந்து தொடர்ந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது என்று சுட்டிக் காட்டியுள்ளனர். வீட்டுப் பணியாளர்கள் வேலை வாய்ப்பு நிபந்தனைகள் மசோதா - 1959, அதற்குப் பிறகு பல மாதிரி சட்ட முன்வடிவுகள் 1989, 2004, 2008, 2015, 2016, 2017 ஆகியவை தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகின. இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும்; மத்திய அரசு உடனடியாக உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து ஒருங்கிணைந்த சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெப்பவாத சிகிச்சை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகள்

வெப்பவாத பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

குடியரசு துணைத் தலைவர் திருமலையில் வழிபாடு

குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகி ருஷ்ணன் செவ்வாய்க்கிழமை திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார்.

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்

142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

time to read

1 mins

April 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வாக்கு எண்ணும் நாளின் முடிவில் வாக்குப் பதிவின் துல்லிய எண்ணிக்கை!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான மொத்த வாக்குகளின் துல்லிய எண்ணிக்கை, அவை எண்ணப்படும் நாளில் (மே 4) அதிகாரபூர்வமாக வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

time to read

1 mins

April 29, 2026

Dinamani Dharmapuri

மார்ச் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.1%

5 மாதங்களில் இல்லாத குறைந்த வளர்ச்சி

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மிகக் கடுமையான பரிசோதனை கட்டுப்பாடுகளைக் கடந்து வந்தேன்

செபாஸ்டியன் சாவே

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்திலுள்ள ஸ்ரீகூத்தாண்டவர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் கட்டிக் கொள்ளும் வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

புதுச்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஜூன் 1-இல் தொடக்கம்

தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம்

time to read

1 min

April 29, 2026

Dinamani Dharmapuri

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 min

April 29, 2026

Translate

Share

-
+

Change font size