Versuchen GOLD - Frei
ஆதரித்தால் போதும் அடியேனை...
Dinamani Dharmapuri
|March 03, 2025
இடம்பெயரும் தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்தால் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்நிலையில் முன்னேறிய மாநிலங்களில் நபர் பற்றாக்குறை ஏற்படும், வளர்ச்சிப் பணிகள், அத்தியாவசியப் பணிகள் முடங்கும்.
வீட்டில் தினசரி வேலைகளைச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். யாரோ ஓர் ஏழைப் பெண் சில மணி நேரம் வீட்டு வேலை செய்துவிட்டுப் போகிறார் என்று அந்த அத்தியாவசிய வேலைக்கு மதிப்பு கொடுப்பதில்லை. கரோனா தாக்கியபோது சமூக இடைவெளியைக் காக்க வேண்டிய கட்டத்தில் வீட்டு வேலைப் பணியாளரும் வெளியில் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது தான் பலருக்கு அன்றாட வீட்டு வேலையின் மதிப்பு புரிந்தது.
அண்ணாவின் திரைக்கதையில் 1949-ஆம் வருடம் வெளிவந்த 'வேலைக்காரி' என்ற திரைப்படம், வீட்டு வேலை செய்பவர்களின் நிலையை நிதர்சனமாக சித்தரித்தது. வீட்டில் உள்ளவர்களின் ஏளனப் பேச்சு, ஏசுதலுக்கு உட்படுதல், குனிந்து நிமிர்ந்தால் வீட்டில் உள்ள ஆண்களின் வக்கிரப் பார்வையை தவிர்க்க கூனிக் குறுகுதல் போன்ற எண்ணற்ற சங்கடங்களைச் சகித்து, வயிற்றைக் கழுவ உழைக்கும் இந்த வர்க்கத்தினர் பற்றி சமுதாய விழிப்புணர்வு கொடுத்த படம் 'வேலைக்காரி'. கல்கி கிருஷ்ணமூர்த்தி தனது கல்கி இதழில், 'சமூகத்தை சீர்திருத்த வந்த ஒரு சிறந்த படம்' என்று விமர்சனம் எழுதினார். சட்டம் ஒரு இருட்டறை. அதிலே வக்கீலின் வாதம் ஒரு விளக்கு. ஆனால், அது ஏழைக்கு எட்டாத விளக்கு என்பன போன்ற வசனங்கள் மக்களை ஈர்த்தன.
சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் சூரிய காந்த், உஜ்ஜல் பூயான் அமர்வில், வீட்டுவேலை செய்பவர் சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் போது வீட்டு வேலை செய்பவர்களுக்கு தக்க சட்ட பாதுகாப்பு இல்லாத பிரச்னை 1959 - இல் இருந்து தொடர்ந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது என்று சுட்டிக் காட்டியுள்ளனர். வீட்டுப் பணியாளர்கள் வேலை வாய்ப்பு நிபந்தனைகள் மசோதா - 1959, அதற்குப் பிறகு பல மாதிரி சட்ட முன்வடிவுகள் 1989, 2004, 2008, 2015, 2016, 2017 ஆகியவை தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்றப்படாமல் காலாவதியாகின. இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும்; மத்திய அரசு உடனடியாக உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்து ஒருங்கிணைந்த சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der March 03, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சி அரங்கில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
1 mins
April 27, 2026
Dinamani Dharmapuri
கோடை விடுமுறை: ஒகேனக்கல், ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் ஏற்காடு பகுதிகளில் ஆயி ரக்கணக்கான சுற்றுலாப் பயணி கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்த னர்.
2 mins
April 27, 2026
Dinamani Dharmapuri
அருணாசலேஸ்வரர் கோயில் வசந்த உற்சவம்: வெட்டிவேர் பல்லக்கில் வலம் வந்த சுவாமி
அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆம் நாள் நிகழ்வில் சுவாமி வெட்டிவேர் பல்லக்கில் வலம் வந்து அருள்பாலித்தார் (படம்).
1 min
April 27, 2026
Dinamani Dharmapuri
தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
இயந்திரமயமாக்கல் உலகெங்கும் அதிவேகமாகப் பரவி வருகிறது.
2 mins
April 27, 2026
Dinamani Dharmapuri
பொறுப்பால் உயரும் பெருமை!
தலைமை மனது வைத்தால், தகரமும் கூட தங்கமாக மாறிவிடும்.
3 mins
April 27, 2026
Dinamani Dharmapuri
காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம் முன்னோடி
'காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னோடியாக திகழ்கின்றன' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 mins
April 27, 2026
Dinamani Dharmapuri
பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள்: மத்திய அமைச்சர் ஆலோசனை
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
April 27, 2026
Dinamani Dharmapuri
ஆலங்குடி கோயிலில் மே 26-இல் குருப்பெயர்ச்சி விழா
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் வரும் மே 26-ஆம் தேதி குரு பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.
1 min
April 27, 2026
Dinamani Dharmapuri
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல்காரர்கள் உடனடி வெளியேற்றம்
அமித் ஷா வாக்குறுதி
1 min
April 27, 2026
Dinamani Dharmapuri
ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்
பொதுத் துறை வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு நடைமுறையை அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்யும்படி, அந்த வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
April 27, 2026
Translate
Change font size

