Intentar ORO - Gratis
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்
DINACHEITHI - MADURAI
|May 21, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
-
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி. வில்சன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராணிமேரி கல்லூரி வளாகத்தில் கட்டப்படவுள்ள கலையரங்கத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில "தமிழ்ப்புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்குதல், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ன்றையதினம் திறந்து வைக்கப்பட்ட இ கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடங்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.269.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, இராணி மேரி கல்லூரியில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடம் இராணி மேரி கல்லூரியில் 22.11.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், இராணி மேரி கல்லூரி வளாகத்திலேயே மாணவியர் தங்கிப் படிப்பதற்கு ஏதுவாக விடுதி ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என மாணவியர்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை உடனே ஏற்றுக் கொண்டு விழா மேடையிலேயே விடுதி கட்டித் தரப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
Esta historia es de la edición May 21, 2025 de DINACHEITHI - MADURAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு
2 mins
January 14, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
January 14, 2026
DINACHEITHI - MADURAI
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min
January 14, 2026
DINACHEITHI - MADURAI
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min
January 14, 2026
DINACHEITHI - MADURAI
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?
பெண்களுக்கு இனிப்பான செய்தி
1 min
January 12, 2026
DINACHEITHI - MADURAI
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழ வேண்டும்
அயலக தமிழர் விழாவில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் பேச்சு
1 mins
January 12, 2026
DINACHEITHI - MADURAI
டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை
80 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்
1 mins
January 12, 2026
DINACHEITHI - MADURAI
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்
போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது
1 min
January 12, 2026
DINACHEITHI - MADURAI
இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் அமல் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
2 mins
January 12, 2026
DINACHEITHI - MADURAI
பாராளுமன்றம் ஜன 28-ந் தேதி கூடுகிறது
பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
1 min
January 10, 2026
Translate
Change font size
