Try GOLD - Free

தமிழர்களை துரத்துகின்ற தவறு

Virakesari Weekly

|

June 29, 2025

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்க முற்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகளில் ஒருவர், 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் பெருவாரியாக வாக்களித்திருந்தனர் என்பதை நினைவு கூர்ந்திருந்தார்.

போர்க்காலத்திலும் சரி, போருக்கு பின்னரான சூழலில் சரி, சிங்கள மக்களால் கொண்டாடப்படுபவர்களாக இருந்தவர்கள் அவர்கள்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலும், அதற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினாலும், அவர்கள் முக்கியமான இராஜதந்திரப் பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில், முக்கியமான பதவிகள் வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்கள்.

அதேவேளை, அவர்கள் மீது தமிழர் தரப்பினால் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், அந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.

அந்தக் குற்றச்சாட்டுகளின் காரணமாக, இறுதிக் கட்டப் போரில் முக்கிய பங்கு வகித்த பலர், இப்பொழுது வெளிநாடுகளில் தடைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களால் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவினால் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, தம்மால் தெற்காசிய நாடுகளுக்குக் கூட, இலகுவாகப் பயணம் செய்ய முடியாத நிலை இருப்பதாகக் கூறியிருந்தார்.

அவர்களின் இந்த நிலைமைக்குக் காரணம், இறுதிக் கட்டப் போரில் அவர்கள் வகித்த பங்கு.

இறுதிக் கட்டப் போரில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், இவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு இது வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது. போர் ஒன்றில் அழிவுகள், இழப்புக்கள் ஏற்படுவது இயல்பு.

ஆனால், இறுதிக் கட்டப் போரில் பங்கெடுத்தவர்களைத் தாண்டி குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தன.

சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும், மனித உரிமைச் சட்டங்களையும் மீறும் வகையில், மனித குலத்துக்கு எதிரானதாகவும் அந்தக் குற்றங்கள் இடம்பெற்றிருந்தன.

அவை இனப்படுகொலை அல்லது இனஅழிப்பு எனக் கூறத்தக்களவுக்கு மோசமானவையாக இருந்தன.

அதன் அடிப்படையில் தான், இலங்கையின் படை அதிகாரிகள் பலருக்கும், வெளிநாடுகளில் தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்தத் தடைகள் அவர்களுக்குப் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்ல முடியாது.

MORE STORIES FROM Virakesari Weekly

Virakesari Weekly

மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு

வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்

பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்

இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அடுத்த கட்ட சாணக்கியம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.

time to read

3 mins

June 29, 2025

Virakesari Weekly

ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

சிக்கிக் கொண்ட கடற்படை

இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.

time to read

2 mins

June 29, 2025

Virakesari Weekly

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி

பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.

time to read

1 min

June 29, 2025

Translate

Share

-
+

Change font size