மனித குலத்தின் சாபக்கேடாக சித்திரவதைகள்
Virakesari Weekly
|June 22, 2025
கள்ளங் கபடம் இல்லாது பொக்கை வாயைத் திறந்து சிரிக்கும் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தையைக் கண் டவுடன் யாரும் தன்னை அவதானிக்க வில்லை என்பதை அக்கம் பக்கம் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அந்தக் குழந்தையை திருட்டுத்தனமாக கிள்ளி விட்டு அவர்கள் அழுவதைக் கண்டு மகிழ்ச் சியடையும் சிறார்களை நாம் எமது சமூ கத்தில் ஆங்காங்கே காண்கிறோம்.
அந்த சிறுவர்களைப் பொறுத்தவரை அவர்கள் முன்னாலுள்ள அந்தப் பச்சிளம் குழந்தை அவர்களுக்கு விளையாடுவதற்குக் கிடைத்த அரிய பொருள் மட்டுமே. தாம் கிள்ளுவதால் அந்தக் குழந்தை அடையும் வேதனை, சித்திரவதை தொடர்பில் அறியாப் பருவத்திலுள்ள அந்த சிறுவர்களில் பலர் உணர்வதில்லை. தாம் கிள்ளுகையில் அழ ஆரம்பிக்கும் அந்தக் குழந்தையின் மாறும் முகபாவத்தை அவர்கள் ஒரு வேடிக்கையொன்றாக மட்டுமே நோக்குகின்றனர்.
அந்த சிறுவர்கள் வளர்ந்து பக்குவம் அடைகையில் பச்சிளம் குழந்தைகள் உட்பட தன்னையொத்த சக மனிதர்களின் வலிகள், வேதனைகள் என்பவற்றை மெல்ல மெல்ல உணரத்தலைப்பட்டு அவர்களுக்காக பச்சாதப்படும் மனோநிலைக்கு இயல்பாக மாறுவது யதார்த்தமாக உள்ளது.
எனினும் இன்று உலகமெங்கும் வாழ்க்கையின் அனுபவங்கள் பலவற்றைத் தாண்டி பக்குவமடைந்த வயதிலுள்ள ஒரு சில தரப்பினர்களால் மனிதாபிமானத்தை மறந்து மற்றவர்களுக்கு எதிராக கொடூரமான சித்திரவதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருவது துரதிர்ஷ்டவசமானதாகும்.
சித்திரவதை என்பது தனி நபர்களாலும் குழுக்களாலும் அதிகாரத்திலும் செல்வநிலையிலும் அந்தஸ்திலும் உயர் மட்டத்திலுள்ள வர்க்கத்தினர் ஒரு சிலராலும் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. வீடுகளிலும் சமூக மட்டத்திலும் இவ்வாறு சித்திரவதைகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கு சட்ட ரீதியான அணுகுமுறையை நாடி தீர்வைப் பெறுவது சாத்தியமாகிறது.
ஆனால் அதிகாரத்திலும் அந்தஸ்திலும் செல்வ நிலையிலும் உயர் மட்டத்திலுள்ளவர்களின் செல்வாக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் சித்திரவதைகளிலிருந்து தப்பிப்பது மற்றும் அதற்கான நிவாரணம் பெறுவது என்பன கல்லில் நாருரிப்பதை விடவும் மிகவும் சிரமமானவையாக உள்ளன. குறிப்பாக சட்ட அமுலாக்கப் பிரிவிலுள்ள தரப்பினரால் முன்னெடுக்கப்படும் எதேச்சதிகார கைதுகள் மற்றும் சித்திரவதைகள் என்பன அப்பாவிப் பொதுமக்களைப் பொறுத்த வரை மீள முடியாத சாபக் கேடுகளாக உள்ளன.
This story is from the June 22, 2025 edition of Virakesari Weekly.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Virakesari Weekly
Virakesari Weekly
மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு
வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு
1 min
August 24, 2025
Virakesari Weekly
ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்
யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
1 min
August 24, 2025
Virakesari Weekly
மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்
பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.
1 min
June 29, 2025
Virakesari Weekly
ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்
இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அடுத்த கட்ட சாணக்கியம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.
3 mins
June 29, 2025
Virakesari Weekly
ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு
அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்
நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
சிக்கிக் கொண்ட கடற்படை
இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.
2 mins
June 29, 2025
Virakesari Weekly
புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்
இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
1 min
June 29, 2025
Virakesari Weekly
பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி
பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.
1 min
June 29, 2025
Translate
Change font size

