Try GOLD - Free

பிரதேச சபைத் திருத்தச் சட்டம் வலுப்படுத்தப்படுமா?

Virakesari Weekly

|

May 18, 2025

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது.

- சுப்ரமணியம் தியாகு நானுஓயா நிருபர்

பிரதேச சபைத் திருத்தச் சட்டம் வலுப்படுத்தப்படுமா?

பண்டைய காலங்களில் கிராம சபைகள் கிராம நிர்வாகத்தின் அடிப்படையாக இருந்தன.

இவை மக்களின் முறைப்பாடுகளை ஆராய்ந்து குறைகளை தீர்ப்பதற்கான அமைப்பாக செயல்பட்டன. 1833 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சி காலத்தில் உள்ளூர் ஆட்சி அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டன.

1865 ஆம் ஆண்டு Municipal Council ordinance No 17 மூலம் கொழும்பு மற்றும் கண்டி நகரங்களுக்கு மாநகர சபைகள் நிறுவப்பட்டன.

இவை இலங்கையில் உள்ளூராட்சி சபைகளின் ஆரம்பமாக கருதப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து 1939 ஆம் ஆண்டு நகர சபைகள் உருவாக்கப்பட்டன.

1987 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் உள்ளூராட்சி நிர்வாகம் மாகாண சபைகளின் கீழ் மாற்றப்பட்டது. அதே ஆண்டில் பிரதேச சபை சட்டம் நிறைவேற்றப்பட்டு 1988 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 257 பிரதேச சபைகள் செயற்பட தொடங்கின.

சுருக்கமாக கூறினால் இலங்கையில் உள்ளூராட்சி சபைகள் 1865 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்துடன் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பல்வேறு காலங்களில் சட்டத்திருத்தங்கள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் மூலம் உள்ளூராட்சி அமைப்புகள் விரிவடைந்தன. உள்ளூராட்சி சபைகள் பல்வேறு காலகட்டங்களில் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் எந்த ஒரு கட்டத்திலும் அவை பெருந்தோட்ட மக்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலையிலேயே செயற்பட்டு வந்தன.

2006 ஆம் ஆண்டு உடபலாத்த பிரதேச சபையானது தனது பிரதேசத்திற்கு உட்பட்ட நியூ பீகொக், செல்வகந்த, மெல்போட் ஆகிய பெருந்தோட்ட பகுதிகளுக்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்ததன் காரணமாக அப்போதைய மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உடபலாத்த பிரதேச சபையை கலைத்து அதன் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்தார்.

இலங்கையில் மலையக சமூகம் 200 ஆண்டுகளை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அவர்களை இந்த நாட்டு மக்களாக கருதாது, ஏனைய சமூகங்கள் அனுபவிக்கின்ற உரிமைகளை அனுபவிக்க முடியாத சூழ்நிலையை பிரதேச சபை சட்டங்கள் கொண்டிருந்தன.

MORE STORIES FROM Virakesari Weekly

Virakesari Weekly

மீள் குடியேற்றம், மீள் நிர்மாணம் செய்வதற்கு திட்ட முன்மொழிவு

வீரகேசரி செய்தியை கோடிட்டுக்காட்டி பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைப்பு

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

ரணிலின் கைது தென்பகுதி அரசியல் அரங்கிலே வித்தியாசமான மாற்றங்களை கொண்டுவரலாம்

யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பது முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாகி இருக்கின்றது. ஆனாலும் இந்தக் கைது கூட தென்பகுதி அரசியல் அரங்கிலே ஒரு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டுவரக் கூடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

August 24, 2025

Virakesari Weekly

மூன்று வகை கிரிக்கெட்களிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பது மகிழ்ச்சி தருவதாக பெத்தும் நிஸ்ஸன்க கூறுகிறார்

பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் இரண்டு டெஸ்ட்களிலும் சதங்கள் குவித்ததையிடிலும், மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிப்பதையிடிலும் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பெத்தும் நிஸ்ஸன்க் தெரிவித்தார்.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

ஈரானிய தளபதிகள், விஞ்ஞானிகளுக்கு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்

இஸ்ரேலுடனான யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள்க்கு ஈரானிய அரசாங்கம் நேற்று அரச மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்தியது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அடுத்த கட்ட சாணக்கியம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்கு கீழே அடுத்த அடுக்கில் இரண்டாம் நிலை தலைவர்களை, தளபதிகளை பேணிவந்த மு.கா. தலைவர், அண்மைக்காலத்தில் அந்த அடுக்கில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது.

time to read

3 mins

June 29, 2025

Virakesari Weekly

ட்ரம்பின் நிறைவேற்றதிகார உத்தரவுகளை கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு

அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்றதிகார உத்தரவுக ளுக்கு கீழ் நீதிமன்றங்கள் தடுப்பதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் நேற்று முன்தினம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதிகளுக்கும் ஒரு பெரு வெற்றியாகக் கருதப்படுகிறது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

அகதிகளின் உரிமைகள் தொடர்பில் தேசிய மட்ட விழிப்புணர்வு அவசியம்

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

சிக்கிக் கொண்ட கடற்படை

இலங்கை கடற்படையை சேர்ந்த ஒருவர் சர்வதேச கடற்படை செயலணி ஒன்றின் தளபதியாகப் பதவி வகிப்பது, அதன் முக்கால் நூற்றாண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை.

time to read

2 mins

June 29, 2025

Virakesari Weekly

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவத்தில்

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்றுமுன்தினம் (27) மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

time to read

1 min

June 29, 2025

Virakesari Weekly

பத்திரிகையாளர்களை பாராளுமன்றத்துக்கு அழைத்து கௌரவித்த அமைச்சர் ஹரி

பத்திரிகையாளர்களை கனேடிய பாராளுமன்றத்துக்கு அழைத்து அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கௌரவித்துள்ளார்.

time to read

1 min

June 29, 2025

Translate

Share

-
+

Change font size