Try GOLD - Free
தமிழ்நாட்டுக்குப் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவரவும் வேலை வாய்ப்பை விரிவாக்குவதும்தான் முதலமைச்சரின் நோக்கம்!
Viduthalai
|May 29, 2023
நாடாளுமன்ற அமைப்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி தன் பொறுப்பை உணர்ந்து பேசவேண்டாமா?, தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தைக் கொச்சைப்படுத்தலாமா?, இனியாவது பொறுப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சித் தலைவர் நடந்துகொள்ளட்டும்!
-
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கண்டுள்ளபடி எதிர்க்கட்சித் தலைவர் தன் கடமையை ஆற்றிட வேண்டும் என்றும், ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சும், நடைமுறையும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற கடமைக்கும், கண்ணியத்துக்கும் உகந்ததாக இல்லை என்றும் சுட்டிக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
ஜனநாயகத்தில் - அதுவும் சட்டமன்ற, நாடாளுமன்ற ஆட்சி முறையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது மிக முக்கியமான பொறுப்பாகும்.
அவர் தன் கடமையை, ஆக்கப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் செய்தால், அது நாட்டு நலனுக்குப் பெருமளவில் உதவிடுவதாகும்.
இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்ற முறைகளை யொட்டித்தான் நம் நாட்டில் ‘‘அமைச்சரவை ஆளுமை முறை'' (Cabinet System) அரசமைப்புச் சட்ட கர்த் தாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் போல் ‘‘அதிபர் ஆட்சி முறை'' (Presidential System) உருவாக்கப்படவில்லை.
இங்கிலாந்தில் பெரிதும் இரு கட்சிகள்தான் போட்டியில் எடுப்பாக எப்போதும் உள்ளவை.
எதிர்க்கட்சித் தலைவரை, அந்நாட்டு ஆட்சிமுறையில் - ‘‘His Majesty's Loyal Opposition'' - ‘‘மாட்சிமை தாங்கிய மன்னராட்சியின், விசுவாசமிக்க எதிர்க்கட்சித் தலைவர்'' என்றே அழைப்பர்.
நம் நாட்டு ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய தகுதி!
நம் நாட்டு ஜனநாயகத்தில் ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவருக்கு கேபினட் அமைச்சர் தகுதி, ஊதியம், இல்லம் மற்ற வசதிகள் எல்லாம் தரப்படும் பதவியாகவே கருதி நடத்தும் முறையே செயற்பாட்டில் உள்ளது.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது சட்ட மன்றத்திலும், மாண்புக்குரிய பொறுப்புமிக்க பதவி. ஆனால், மேனாள் முதலமைச்சராக இருந்த ஒருவர், அதனை மக்கள் தீர்ப்பாகவே ஏற்று கடமையாற்ற வரும் போது, அப்பொறுப்பில் பொதுவானவர்கள் மெச்சி, பாராட்டும்படி நடந்து சாதனை சரித்திரம் படைக்கவேண்டும்.
தமிழ்நாட்டில், சட்டமன்ற வரலாற்றில் அண்ணா, கலைஞர் போன்ற ‘திராவிட மாடல்' ஆளுமையாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து முத்திரை பதித்துள்ளனர்!
This story is from the May 29, 2023 edition of Viduthalai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Viduthalai
Viduthalai
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்
மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
1 mins
JUNE 06,2025
Viduthalai
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு
அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்
1 min
JUNE 06,2025
Viduthalai
முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து
காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
1 min
JUNE 06,2025
Viduthalai
தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்
வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:
வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது
இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
1 min
JUNE 06,2025
Translate
Change font size

