Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் சர். வில்லியம் மெயர் நினைவு அறக்கட்டளை கருத்தரங்கம்

Viduthalai

|

November 30, 2022

"சமூக நீதி - நேற்று, இன்று, நாளை"-திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி விளக்கவுரை

சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் சர். வில்லியம் மெயர் நினைவு அறக்கட்டளை கருத்தரங்கம்

சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் சர். வில்லியம் மெயர் நினைவு அறக்கட்டளை சார்பில் 29.11.2022 அன்று கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது. ‘சமூகநீதி - நேற்று, இன்று, நாளை' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமை வகித்தார். பொருளாதாரப் பேராசிரியர் மு.நாகநாதன், தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் கோ.கருணாநிதி ஆகியோர் பங்கேற்று சமூகநீதி வரலாற்று கருத்துகளை வழங்கினர்.

கருத்தரங்கில் தமிழர் தலைவருக்கு 
90ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து
 
கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள்  - டிசம்பர் 2ஆம் நாள் என கருத்தரங்கினை ஏற்பாடு செய்த வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் அறிவித்ததும் கருத்தரங்கமே மகிழ்ச்சிப் பெருவெள்ளம் கண்டது. 
90 ஆண்டு வாழ்வில் தனது 80 ஆண்டு கால பொது வாழ்க்கையினை சமூகத்திற்கு, மனிதகுலத்திற்கு - ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு வழங்கிய தமிழர் தலைவருக்கு, வருகை தந்த பேராசிரியப் பெருமக்கள், கல்வியாளர்கள், சமூகநீதி செயல்பாட்டாளர்கள், மாணவ - மாணவியர் என அனைவரும் எழுந்து நின்று பெரும் கரவொலி எழுப்பி தங்களது வாழ்த்தினைத் தெரிவித்தனர். தமிழர் தலைவர் உரை வீச்சுக்குப் பின்னர் அரங்கமே கரவொலியில் எழுச்சி வெள்ளத்தில் திளைத்தது. ஒப்பில்லா சமுதாயப் பணியாற்றி வரும் தமிழர் தலைவருக்கு நன்றிப் பெருக்கினை தெரிவிக்கும் வகையில் வாழ்த்துகளை வெளிப்படுத்தி அனைவரும் மகிழ்ந்தனர்.

பல்கலைக்கழக குற்றவியல் துறை கருத்தரங்கக் கூடத்தில் காலை 11 மணிக்குத் தொடங்கிய நிகழ்வில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பல துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், மேனாள் கல்விப் பணி ஆற்றிய அறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அளவில் பங்கேற்றுச் சமூகநீதிக் கருத்து உரை வெள்ளத்தில் தோய்ந்து மகிழ்ந்து நல் ஆக்கம் பெற்றனர்.

MORE STORIES FROM Viduthalai

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு

தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்

மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

time to read

1 mins

JUNE 06,2025

Viduthalai

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு

அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

Viduthalai

முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து

காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை

தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்

வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

Viduthalai

ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:

வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

time to read

1 min

JUNE 06,2025

Viduthalai

காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது

இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.

time to read

1 min

JUNE 06,2025

Translate

Share

-
+

Change font size