Try GOLD - Free

இந்த தேசவிரோதியின் போராட்டம் இன்னும் முடியவில்லை!

Vidivelli Weekly

|

May 22, 2025

ஒரு சினிமா படப்பிடிப்பிற்காகத் தில்லிக்குச் சென்றிருந்தேன். என்னுடைய படப்பிடிப்பு இரவில் நடந்ததால், பகலில் நேரம் கிடைத்தது. தில்லி அப்போது கோடையில் தகித்துக் கொண்டிருந்தது.

- நடிகர் பிரகாஷ் ராஜ்

இந்த தேசவிரோதியின் போராட்டம் இன்னும் முடியவில்லை!

புதிதாக மாநில அரசாங்கம் தேர்வாகியிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தில்லியில் இருந்தார்கள். இப்போது சட்டமாகியுள்ள, வக்ஃப் திருத்த மசோதாவால் நாடாளுமன்றம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. உமர் காலிதை நினைத்துக் கொண்டேன். அவர் சிறையிலடைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகப்போகிறது. திகார் சிறைக்குள் இருந்தபடி, இரக்கமற்ற இந்த வெப்பத்தை அவர் எப்படிச் சமாளித்துக் கொண்டிருப்பார்? என நினைத்தேன். அவருடைய பெற்றோரும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களின் வீட்டிற்குச் சென்று சந்திக்க உடனே புறப்பட்டேன்.

தேச விரோதி எனப்படும் உமர் காலித்தை நீங்கள் அறிவீர்களா? அவரைப் பற்றி காண்பதற்கு முன் தேச விரோதி என்பவர் யாரென்று நாம் புரிந்துகொள்ள முயல்வோமா? அதைத் தெரிந்துகொள்ளாமல், தேச விரோதிக்கும், தேச பக்தருக்குமான வேறுபாட்டை எப்படிக் கண்டுகொள்ள முடியும்?

இதற்காக நாம் கடந்த காலத்திற்கு மிக அதிக காலம் பின் நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. அண்மைக்கால வரலாற்று உதாரணத்தைக் கவனிப்பதே போதுமானதுதான். அஹிம்சையை நோக்கி, நாட்டை ஒற்றுமைப்படுத்திய மகாத்மா காந்தி, மதநல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தேசம் என்பது எல்லைக்கோடுகளால் ஆன ஒரு படம் அல்ல. அதில் வாழும் மக்களே என்றும் அவர் நம்பினார். நாட்டின் எல்லா மக்களும் தம் விருப்பத்திற்குரிய மதத்தைப் பின்பற்றும் உரிமை உள்ளது என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த மக்கள் எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும், தேசம் அவர்களைச் சகோதர உறவில் பிணைக்கிறது என்றே அவர் நம்பினார். பிரிட்டிஷ் இந்தியாவைச் சமாளித்து எதிர்கொண்ட அந்த மனிதர், சுதந்திர இந்தியாவில் அவரின் மேற்கண்ட கருத்துகளுக்காக நாதுராம் கோட்சே என்ற மத அடிப்படைவாதியால் கொல்லப்பட்டார் என்பதுதான் முரண் நகை.

MORE STORIES FROM Vidivelli Weekly

Vidivelli Weekly

மர்ஹும் அஷ்ரபின் ஒலுவில் வீடுமற்றும் காணி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு கையளிப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணித்திருந்த வீடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 22, 2025

Vidivelli Weekly

இலங்கை-பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹினிதும செயலாளராக முஜிபுர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவியும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

May 22, 2025

Vidivelli Weekly

மன்னார்-புத்தளம் வீதியை மூட நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானதே

வன்மையாக கண்டிக்கிறோம் என பாராளுமன்றில் ரிஷாத் தெரிவிப்பு

time to read

1 mins

May 22, 2025

Vidivelli Weekly

ஊவாவின் இளம் கல்வியியல் பேராசிரியர் ஜே.டி. கரீம்டீன்

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஜே.டி. கரீம்டீன், பேராசிரியராக பதவியுர்த்தப்பட்டுள்ளார். இதற்கான அனுமதி திறந்த பல்கலைக்கழகத்தின் செனட் சபையினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கையின் கல்வித் துறையில் பணியாற்றுகின்ற இளம் பேராசிரியர்களில் ஒருவராக இவர் திகழ்கின்றார்.

time to read

1 mins

May 22, 2025

Vidivelli Weekly

அவள் கதை" மிஸ் கோலால் ஏற்பட்ட தொடர்பு மத்ஹபை மாற்றிய விவாக பதிவாளர்

இருள் சூழத்தொடங்கிய மாலை வேளையில் ஒரு பெண்ணின் குரல்...சேர்... திரும்பிப் பார்க்கிறேன்.

time to read

2 mins

May 22, 2025

Vidivelli Weekly

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின வைபவம்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு 7 ஜே.ஆர். ஜெயவர்தன நிலையத்தில் வாலிப முன்னணியின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தலைமையில் நடைபெற்றது.

time to read

1 min

May 22, 2025

Vidivelli Weekly

உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்ற தொடரும் அரசியல் போராட்டம்!

இலங்கையிலுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கடந்த மே 6 ஆம் திகதி முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரங்களை யார் பெறப்போகின்றனர் என்ற தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது

time to read

4 mins

May 22, 2025

Vidivelli Weekly

பலஸ்தீனத்தை ஆதரிக்கவும், காஸா மனிதாபிமான பேரழிவை கண்டிக்கவும் ஒன்றிணைந்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும்

காஸாவில் நிகழும் மனிதாபிமான பேரழிவினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், போர்நிறுத்தம் மற்றும் முற்றுகையை நீக்கவும் அழைப்பு விடுப்பதற்காக இலங்கையின் அனைத்து அரசியல் தலைவர்களும் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடினர்.

time to read

3 mins

May 22, 2025

Vidivelli Weekly

மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் ஐந்தாம் வருட நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை பேராதனை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை, அறபு மொழித் துறையின் முன்னாள் தலைவரும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முன்னாள் பணிப்பாளரும், கல்விமானுமான மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் ஐந்தாவது வருட நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 6.30 மணிக்கு கொழும்பு, மருதானை தெமடகொட வீதியிலுள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

time to read

1 min

May 22, 2025

Vidivelli Weekly

'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' செவ்வாயன்று நூல் வெளியீட்டு விழா

இலங்கையில் நடைபெற்ற திகிலூட்டும் உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கி சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.கே.எம். அஸ்வர் எழுதிய 'இலங்கையில் துலங்கும் மர்மங்கள்' எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாயன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

time to read

1 min

May 22, 2025

Translate

Share

-
+

Change font size