Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

உயிர்வாழும் உரிமையும் மரண தண்டனையும்

Thinakkural Daily

|

June 18, 2025

தற்போதைய காலகட்டத்தில் குற்றச் செயல்கள் வகைதொகையின்றிப் பல்கிப்பெருகி சமூகத்தை முழுமையாக செயலிழக்கக்கூடியதாக வளர்ந்துள்ளன. பாதாள உலகக் கோஷ்டி செயற்பாடுகள், முரண்பாடுகள், பாதாள உலகக் கோஷ்டிகளுக்கிடையிலான துப்பாக்கிச் சூடுகள், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் பாவனையும் அத்துடன் இணைந்த குற்றங்களும் என குற்றங்கள் பல்கிப் பெருகியுள்ளன. இவை மட்டுமன்றி அரசியல் கட்சிகளின் பின்புல குற்றச்சம்பவங்கள் குற்றவியல் நடவடிக்கைகள் என்பனவும் விரிவடைந்துள்ளன. இந்த சூழ்நிலையில் கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான குற்றங்களுக்கு நீதிமன்றங்களில் மரணதண்டனை விதிக்கப்படலாம் என ஒரு சாரார் கருதுகின்றனர். பாலியல் துஷ்பிரயோகம், கற்பழிப்பு கடத்தல்கள் போன்றவற்றின் விளைவாக கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கின்ற சூழ்நிலை உள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

- சட்டத்தரணி தி.திருச்செந்தில்நாதன்

இந்த நிலைமையில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மரணதண்டனையை அமுல்படுத்துதல் என்கின்ற விடயம் முன்வைக்கப்படலாமா என்பது தொடர்பில் வேறுபட்ட அணுகுமுறைகள் சமூகத்தில் காணப்படுகின்றன. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், மத ரீதியான கருத்தியலாளர்கள், சமூகவியலாளர்கள் மரணதண்டனை மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்படக்கூடாது என வாதிக்கின்றனர். இந்த நேரத்தில் மரண தண்டனை அமுல்படுத்தாமல் விட்டுள்ளமையானது குற்றங்களின் எண்ணிக்கையினையும், பாரதூரத்தன்மையையும் அதிகரிக்கின்றது என ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

மரணதண்டனையை அமுல்படுத்துவதனை எதிர்ப்போர் பல அடிப்படை நியாயங்களின் கீழ் தமது கருத்தினை வலியுறுத்துகின்றனர். இதன் முதலாவது அம்சமாக கொலை செய்வது தவறானது என்பது அவர்களின் வாதமாக உள்ளது. அதுவும் மரண தண்டனையின் போது முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்வது பாரதூரமானது என கூறப்படுகின்றது. கொலை செய்வது எதிர்மறையானதும் புத்திசாலித்தனமற்ற நடவடிக்கை என இவர்கள் கூறுகின்றனர். நாம் உலகில் வாழும் போது எமது இதயமும் மனமும் நேர்மறையாகவும், நிகழ்காலத்தை நோக்கியதாகவும் உள்ளது. இத்தகைய மனோநிலையை கொண்ட மனிதர்கள் போதுமானளவு மனோபலம் கொண்டவர்கள் என கருதப்படுகின்றது. இவ்வாறு மனோபலம் குறையும் போது எமது நடத்தைகள் போதுமான திறமையுள்ள செயற்பாடுகளாக கருதப்படமுடியாது. நியாயமானளவு விழிப்புணர்வுடன் இருக்கின்ற ஒரு மனிதன் ஒருவரைக் கொலை செய்தலையோ அல்லது கொலையை ஊக்குவிக்கவோ முடியாது. இது மனித கௌரவத்தை பேணிப்பாதுகாக்கும் ஒரு அணுகுமுறையாகும். ஒரு மனிதன் விடுகின்ற ஒவ்வொரு மூச்சும் மற்றோர் மனிதனின் அல்லது சமூகத்தின் உயிர் துடிப்புடன் சம்பந்தப்பட்டது. அத்தகைய மனிதன் மற்றோர் மனிதனை துன்புறுத்துவதென்பது தம்மை தாமே துன்புறுத்துவதற்கு சமமானது. மனித உயிர்களை காவு கொள்ளும் செயற்பாடுகளினால் ஒரு மனிதன் பாதிக்கப்படும் போது முழுச்சமூகமும் பாதிக்கப்படுகின்ற ஒரு உணர்வானது ஏற்படுகின்றது.

MORE STORIES FROM Thinakkural Daily

Thinakkural Daily

தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் 38 வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் இடம்பெற்றது.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

'எச்1பி' விசாவுக்கு போட்டியாக 'கே' விசாவை அறிமுகம் செய்கிறது சீனா

'எச்பி' விசா பெறுவதற்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளில் இருந்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்ப்பதற்காக கே விசாவை அறிமுகப்படுத்துகிறது சீனா.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரி பெண் தொழிலாளி மனு தாக்கல்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை தற்போதைய வாழ்வாதாரத்திற்கு அமைவாக அதிகரிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் பெண் தொழிலாளி ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

வட்டுவாகலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

காற்றாலை கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னார் போராட்டத்தின் 50 ஆவது நாள்; தீப்பந்தம் ஏந்தி மக்கள் கடும் எதிர்ப்பு

மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் அன்று இரவு தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

ஜனாதிபதி அநுரகுமார ஜப்பானுக்கு விஜயம்

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

நாகர்கோவில் ம.வி.படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

21 மாணவர்கள் உட்பட 39 பேருக்கும் அஞ்சலி

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

எமக்காக தனது உயிரைக் கொடுத்த திலீபனுக்காக உதிரம் கொடுப்போம்

நல்லூரில் இரத்ததான முகாம்

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

கண்டி நகருக்கு சுற்றுலா வந்த 5 மாணவர்கள் திடீர் மயக்கம்

கண்டி நகருக்கு சுற்றுலா வந்த ஐந்து மாணவர்கள் உணவு ஒவ் வாமை காரணமாக, மயக்கமுற்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Thinakkural Daily

நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்

மன்னர் சொத்தை அடாத்தாகப் பிடிபோருக்கும் எச்சரிக்கை

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size