Try GOLD - Free
இது போருக்கான காலம் அல்ல!
Dinamani Tiruvannamalai
|June 21, 2025
எந்தவொரு போரும் உலகில் இதுவரை நிலையான அமைதியை ஏற்படுத்தியதில்லை. மாறாகப் பல மனித உயிர்களைப் பலிகொண்டு பேரழிவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றன. இஸ்ரேல்-ஈரான் மோதலை வேடிக்கை பார்க்காமல், உடனடியாக சமரசத்தை ஏற்படுத்துவது அமெரிக்கா, ரஷியா, சீனாவின் கடமை.
இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம் அடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்கள் நாசமாகி விட்டன. இதுவரை சற்றேறக்குறைய 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் இஸ்ரேலில் 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இருதரப்பிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்த நாட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த ஜூன் 13-ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. அன்றைய தினம் ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. நாட்டின் மூத்த அணு விஞ்ஞானிகள் 9 பேர், ராணுவத்தளபதிகள் 3 பேர் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அதிதீவிரத் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் 400 ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. எனினும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன. இஸ்ரேலின் பாட்யாம் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பின்மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேலின் வேறு சில பகுதிகளின் மீதும் ஏவுகணைகள் விழுந்தன.
ஈரானின் இலக்கியமும், ஈரான் மொழித் திரைப்படங்களும் மறக்க முடியாத ஆகச்சிறந்த படைப்புகள் என்பதை நாம் மறுதலித்துவிட முடியாது. 'அனடோலியா', ஈரான் மற்றும் மேற்கு மத்திய ஆசியாவின் சில பகுதிகள், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் மேற்கு பகுதிகளை உள்ளடக்கிய ஈரானியமொழிகளில் எழுதப்பட்டதொகுப்பு. எஞ்சியிருக்கும் மிகப் பழைமையான நூல்கள் ஜொராஸ்ட்ரியானிஸத்தின் புனித நூலான அவிஸ்டாவில் உள்ளன.
This story is from the June 21, 2025 edition of Dinamani Tiruvannamalai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai
பெண் கல்வியின் அவசியம்
சிவன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வரும் படம் 'பொம்மி அப்பா பேரு சிவன்'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இப்படத்தை இயக்கி தயாரிக்கிறார் சிவன் சுப்ரமணி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
1 min
October 12, 2025
Dinamani Tiruvannamalai
சென்னை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் தனி வார்டுகள்
அரசு மருத்துவமனைகளில் 71 படுக்கைகளுடன் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
1 min
October 12, 2025
Dinamani Tiruvannamalai
கோலிவுட் ஸ்டூடியோ!
நட்சத்திரங்களின் ரீயூனியன்!
1 min
October 12, 2025

Dinamani Tiruvannamalai
காலம் பெற உய்யப் போமின்
'காலம் பெற' என்பது விடியற்காலை எனப் பொருள் உணர்த்தும் வழக்குச் சொல்லாகும். 'காலம்பெறப் புறப்பட்டால் தான் அந்த வேலையை முடித்து வீடுதிரும்பலாம்' என்னும் கருத்தில் இச்சொல்லாடல் இடம் பெறுவதை இன்றும் காணலாம்.
2 mins
October 12, 2025
Dinamani Tiruvannamalai
பழந்தமிழரின் காலநிலை அறிவு!
நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களின் இயக்கங்களால் உலகம் இயங்கி வருகிறது. அவற்றுள், நீரின்றி உலகில் எந்த உயிரும் இயங்க இயலாது. அதனால்தான் திருக்குறளில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்து, வான் சிறப்பு என்ற அதிகாரத்தை திருவள்ளுவர் படைத்துள்ளார்.
1 min
October 12, 2025

Dinamani Tiruvannamalai
தமிழிலக்கியங்களில் வரிவிதிப்பு!
ஓர் அரசு இயங்கப் பொருள் வருவாய் மிக மிக இன்றியமையாததாகும். இதனை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் என்ற குறள் (385) சிறப்பாகக் கூறுகிறது.
1 mins
October 12, 2025
Dinamani Tiruvannamalai
வள்ளலாரை வணங்கிய சிம்பு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தத் திரைப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்டு உருவாக இருக்கிறது. இது ஒரு கேங்க்ஸ்டர் கதை. இந்தத் திரைப்படம் வட சென்னை திரைப்படத்தின் கிளைக்கதையாக இருக்கும் என்று வெற்றிமாறன் கூறி யிருக்கிறார். ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'வடசென்னை' படம் பெரியளவில் பேசப்பட்டது. இதனால், இந்தத் திரைப்படத்திற்கான எதிர் பார்ப்பும் மிக அதிகமாக உள்ளது.
1 min
October 12, 2025
Dinamani Tiruvannamalai
இதிகாசங்களால் ஈர்க்கப்பட்ட சிறுமி
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை தொலைக்காட்சியில் பார்த்ததால் வில்வித்தை மீது சிறுமி வெனிஷா ஸ்ரீக்கு ஆர்வம் ஏற்பட்டு வில்வித்தை வீராங்கனையாக மாறியுள்ளார்.
1 mins
October 12, 2025
Dinamani Tiruvannamalai
இளம்பெண்களின் இசை பிரவாகம்!
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து 'பிரவாகம்' என்ற இசைக் குழுவைத் தொடங்கி, நாடு முழுவதும் இசை மழை பொழிந்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதம், மெல்லிசை, இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசை நிகழ்ச்சி என வெவ்வேறு வடிவங்களில் இந்தக் குழுவினர் வழங்கி வரும் புதுமையான நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. அவர்களைச் சந்தித்துப் பேசினோம்:
2 mins
October 12, 2025
Dinamani Tiruvannamalai
பாரம்பரியத்தைப் பறைசாற்ற பனை விதை நடவு!
காகிதம் கண்டுபிடிக்கும் முன்பாக பனை ஓலைகள்தான் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தன. எழுத்தாணியைக் கொண்டு பனை ஓலை கிழியாமல் எழுதும் திறனைப் பெரும்புலவர்கள் பெற்றிருந்தனர். சங்க இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உவே. சாமிநாதைய்யர், பனை ஓலைகளில் எழுதப்பட்ட நம்முடைய பாரம்பரியத்தை மீட்கவில்லை என்றால் தமிழின் பொக்கிஷங்கள் காணாமல்போய் இருக்கும். பனையின் ஒவ்வொரு பாகமும் மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவை. செங்கல்சூளை, வீட்டின் கூரை, சாலை விரிவாக்கம், ரியல் எஸ்டேட் வளர்ச்சி போன்ற காரணங்களால் பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. பனையின் பாரம்பரியத்தை உணர்ந்து பனை விதையை நடவு செய்து வருகிறார், புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த பனை டி. ஆனந்தன். அவரிடம் பேசியதிலிருந்து:
2 mins
October 12, 2025
Translate
Change font size