Try GOLD - Free
நீச்சல் பயிற்சி உயிர் காக்கும்!
Dinamani Tiruvannamalai
|June 14, 2025
ருவள்ளூர் வீரராகவர் கோயில் குளம், விழுப்புரம் மாவட்டம், மலட்டாறு ஆகியவற்றில் தலா 3 சிறார்களும், ஒகேனக்கல் காவிரி ஆறு, புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் குளம், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் குளம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறார்கள் நீர்நிலைகளில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
இவர்களில் சிலர் நீச்சல் தெரியாமலும், தவறி விழுந்தும் மூழ்கியவர்கள். மேலும், சிலர் மூழ்கியவர்களைக் காப்பாற்ற முயன்றவர்கள். சென்னை ஆவடி அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் விழுந்த சிறுவனைக் காப்பாற்ற முயன்ற தாயும், தங்கையும் உயிரிழந்தனர். இதில் சிறுவன் மீட்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவனும் அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தாத்தாவும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் கடந்த மே மாதத்தில் மட்டும் நிகழ்ந்தவை.
இதுபோன்று ஆறு, குளம், ஏரிகளில் மூழ்கிய சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையில் உயிரிழப்பது அன்றாடம் நிகழ்கிறது. குறிப்பாக, பள்ளி விடுமுறை சமயங்களில் சிறார்கள் அதிக அளவில் நீர் நிலைகளில் உயிரிழப்பது நடக்கிறது. நீரில் மூழ்கிய ஒரு நபரைக் காப்பாற்றும் முயற்சியின்போது இருவர், மூவர் என இறக்கின்றனர். கண்ணெதிரே தண்ணீரில் மூழ்கும் தங்களது சொந்தங்களை மீட்கும் ஆவலில் அவர்களும் மூழ்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளின்போது, போலீஸார் வழக்குப் பதிவு செய்வதும், அரசு நிவாரண உதவி அளிப்பதும் வழக்கமாக நிகழ்கின்றன. அதே சமயம், இந்த நிகழ்வுகளைத் தடுக்கும் வழிமுறை குறித்தோ, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தோ அதிகம் சிந்திப்பதில்லை.
This story is from the June 14, 2025 edition of Dinamani Tiruvannamalai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvannamalai
Dinamani Tiruvannamalai
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகள் பலியிடத் தடை
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 mins
October 11, 2025

Dinamani Tiruvannamalai
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
நிகழாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சியான வென்டே வெனிசுலாவின் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) அறிவிக்கப்பட்டுள்ளது.
2 mins
October 11, 2025
Dinamani Tiruvannamalai
நேர் நிர்வாகம்-வாழ்வியல் மதிப்பு!
நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிர்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், விழிப்புணர்வுடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் 'இந்தக் கணம்' மட்டும்தான். அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணர்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.
2 mins
October 10, 2025

Dinamani Tiruvannamalai
பள்ளிகொண்டா ரங்கநாதர்!
தென்தமிழகத்தில் திருவரங்கம் போல, வடதமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில்.
1 mins
October 10, 2025
Dinamani Tiruvannamalai
பாராகிளைடர் தாக்குதல்: மியான்மர் ராணுவம் ஒப்புதல்
மியான்மரில் பௌத்த திருவிழாவின்போது பாராகிளைடர் மூலம் தாக்குதல் நடத்தியதை மியான்மர் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது.
1 min
October 10, 2025
Dinamani Tiruvannamalai
கேரள பேரவையில் அமளியில் ஈடுபட்ட 3 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தலைமை அவைக் காவலர் காயமடைந்ததையடுத்து, 3 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
October 10, 2025
Dinamani Tiruvannamalai
மதுரையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்: எம்.எஸ். தோனி திறந்து வைத்தார்
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
October 10, 2025
Dinamani Tiruvannamalai
மருந்து ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்
கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் உரிய ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனக் கூறி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
October 10, 2025

Dinamani Tiruvannamalai
இந்தியா - பாகிஸ்தான் மோதல் வர்த்தக ரீதியிலான திட்டமிடல்
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன்
1 mins
October 09, 2025
Dinamani Tiruvannamalai
சபலென்கா, கெளஃபி வெற்றி
சீனாவில் நடைபெறும் வூஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான பெலராஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
October 09, 2025
Translate
Change font size