Try GOLD - Free

அணு ஆயுதம் என்னும் அச்சுறுத்தல்

Dinamani Tiruvallur

|

August 18, 2025

அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போராக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது. அணுகுண்டுகளால் ஜப்பானில் ஏற்பட்ட விளைவுகளை இரண்டாம் உலகப் போர் இன்னும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால், உலக நாடுகள் அணுகுண்டு தயாரிப்பதை ஐ.நா.வும், வல்லரசு நாடுகளும் எதிர்த்து வருகின்றன.

- உதயமு. வீரையன்

உலகம் எங்கும் ஆங்காங்கு பல நாடுகளில் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. போரின் இறுதியில் அமைதிப் பேச்சுவார்த்தையும் நடக்கிறது. அது முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முடிவில்லாத இந்தப் போரும், பேச்சுவார்த்தையும் எங்கே போய் முடியுமோ என்ற கவலையும் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது.

உலக வல்லரசான அமெரிக்காவும், ரஷ்யாவும் இந்தப் போர்களுக்குக் காரணமாக இருக்கின்றன. அவர்கள் தயாரித்து வைத்திருக்கும் ஆயுதங்களை விற்பனை செய்வதற்காகவே போர்களைத் தூண்டி விடுகின்றன. இப்போது போர்கள் எல்லாமே ஏவுகணை களின் போர்களாகவே மாறி விட்டன.

கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கினைத் தாக்கி அழிக்கின்றன. பல காலமாகப் பாடுபட்டு எழுப்பப்பட்ட வானளாவிய கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் தகர்க்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. அழிப்பது எப்போதும் எளிய செயலாகும். அந்த நகரங்களைக் கட்டி எழுப்புவதற்கு எத்தனை காலமாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதற்குப் பின்னால் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றை எடுத்துக் காட்டியே அச்சுறுத்தல்கள் நிகழ்கின்றன. அண்டை நாடான பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடாக இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 'குரங்கு கையில் கொள்ளியைக் கொடுத்த கதையே' நினைவுக்கு வருகிறது.

"எதிர்காலத்தில் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்; பாகிஸ்தானைத் தாக்கினால் உலகின் ஒரு பகுதி அழிவைச் சந்திக்கும்..." என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீர் பேசியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அசீம் முனீருக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்து அளித்தார். இரண்டாவது முறையாக கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி அமெரிக்காவுக்கு அவர் அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொண்டார்.

MORE STORIES FROM Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Tiruvallur

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Tiruvallur

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்ய முடியுமா?

பொதுச் செயலர் பதில்

time to read

1 mins

November 03, 2025

Dinamani Tiruvallur

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 03, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruvallur

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvallur

கல்லறைத் தோட்டங்கள்-கபர்ஸ்தான் அமைக்க உத்தரவு கடிதங்கள்

முதல்வர் வழங்கினார்

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvallur

1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு

பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvallur

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Translate

Share

-
+

Change font size