Try GOLD - Free

வடகிழக்கு இந்தியாவின் இளைய சகோதரி!

Dinamani Thoothukudi

|

September 07, 2025

விண்ணை முட்ட வளர்ந்த மலைகள். அதிகாலை 4 மணிக்கெல்லாம் விடியல். மனிதர்கள் விழிக்கும் முன்பே சாலைகளில் தவழும் மேகக் கூட்டங்கள். அத்தனை அழகின் எழிலையும் ஒருங்கே கொண்டிருக்கிறது மலைமகளான ஐசால் - மிசோரம் மாநிலத் தலைநகர்.

- வ.ஜெயபாண்டி

பாரதத்தின் வடகிழக்கு மாநிலங்களில் இளைய சகோதரியாகப் போற்றப்படும் மிசோரம் மாநிலத்தின் மொத்தப் பரப்பு சுமார் 21,081 சதுர கிலோ மீட்டர். மலைகளையே தரைகளாக்கி அமைந்த மாநிலத்தில் முக்கியத் தொழில் விவசாயம்.

மலைச்சரிவுகளில் சீட்டுக் கட்டுகள் அடுக்கப்பட்டது போல அழகுற அமைந்துள்ளன அடுக்குமாடி வீடுகளும், தங்கும் விடுதிகளும். அங்குள்ள சாலைகள் வளைந்தும், நெளிந்தும், உயர்ந்தும், தாழ்ந்தும் தன் அடிப்படை அமைப்பை இழக்காமல் நவீனமயமாக்கப்பட்டிருப்பது ஆச்சரியம்!

அதிர்ந்து பேசாத மக்கள், அவசரத்துக்குக் கூட ஒலி எழுப்பாத வாகனங்கள், அரசியல் கொடிக் கம்பங்கள் இல்லாத அகலமில்லாத சாலைகள், அரசியல், சினிமா, விளம்பர போஸ்டர்கள் இல்லாத சுவர்கள், மதுக்கடை இல்லாத தெருக்கள்.

ராஜ்பவன், சட்டப்பேரவைக் கூட்ட அரங்கம், போர் நினைவிடம் ஆகியவற்றுடன் ஐசாலின் அடையாளமான இரும்புப் பாலமும் குறிப்பிடத்தக்கது. போக்குவரத்துக்கான போலீஸாரைவிட சட்டம், ஒழுங்கு போலீஸார் குறைவாகவே நடமாடுகின்றனர்.

கார்களும், இருசக்கர வாகனங்களும் போக்குவரத்தின் முக்கிய அம்சங்களாகியிருப்பதால், அதைப் பழுதுநீக்கும் தொழிலில் ஆண்களுக்குச் சமமாக பெண்களும் உள்ளனர்.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அன்புள்ள ஆசிரியருக்கு...

சட்டம் இல்லை

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

படித்தால் மட்டும் போதுமா?

அண்மைக்காலமாக உயர் கல்வியில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Thoothukudi

பயிற்சியாளர் நெகிழ்ச்சி..

சாம்பியன் கோப்பை வென்ற உணர்ச்சிப் பெருக்கில் இருந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், மரியாதை மற்றும் மகிழ்ச்சி நிமித்தமாக ஒருவரின் கால்களை பிடித்த தருணம் பெரிதும் கவனம் ஈர்த்தது. அவர் அமோல் மஜூம்தார். இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர்.

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்

time to read

2 mins

November 04, 2025

Dinamani Thoothukudi

ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!

பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Thoothukudi

எண்மக் கைதுக்கு எதிராக இரும்புக்கர நடவடிக்கை தேவை: உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் ரூ.3,000 கோடி மோசடி

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Thoothukudi

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Thoothukudi

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 03, 2025

Translate

Share

-
+

Change font size