Try GOLD - Free

அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல

Dinamani Thoothukudi

|

August 25, 2025

தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

புது தில்லி, ஆக. 24:

அண்மையில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத்தொடரில், பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இடையூறுகள் மற்றும் ஒத்திவைப்புகளால், இரு அவைகளிலும் வழக்கமான அலுவல்கள் பெருமளவில் முடங்கிய நிலையில், அமித் ஷா மேற்கண்ட விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய பேரவைத் தலைவர்கள் கருத்தரங்கில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது: நாடாளுமன்றமும் மாநிலப் பேரவைகளும் ஆக்கபூர்வ விவாதங்களுக்கான இடமாகும். ஜனநாயகத்தில் விவாதம் முக்கியமானது. நாடாளுமன்றத்திலோ, பேரவையிலோ விரிவான விவாதம் இல்லையெனில், அவை உயிர்ப்பில்லாத கட்டடங்களாகவே இருக்கும். தேசக் கட்டமைப்பில் அவற்றின் பங்களிப்பும் பாதிக்கப்படும். மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண கூட்டு விவாதமே சிறந்த வழிமுறை.

அதேநேரம், எதிர்க்கட்சி என்ற பெயரில், தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அமர்விலும் அவை அலுவல்களை முடக்குவது நல்லதல்ல. எதிர்க்கட்சிகள் எப்போதுமே கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தேசமும், மக்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

MORE STORIES FROM Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அன்புள்ள ஆசிரியருக்கு...

சட்டம் இல்லை

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

படித்தால் மட்டும் போதுமா?

அண்மைக்காலமாக உயர் கல்வியில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது பள்ளிக் கல்வி, உயர் கல்வியில் மாணவிகள் சேர்க்கையானது பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்த அளவில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Thoothukudi

பயிற்சியாளர் நெகிழ்ச்சி..

சாம்பியன் கோப்பை வென்ற உணர்ச்சிப் பெருக்கில் இருந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், மரியாதை மற்றும் மகிழ்ச்சி நிமித்தமாக ஒருவரின் கால்களை பிடித்த தருணம் பெரிதும் கவனம் ஈர்த்தது. அவர் அமோல் மஜூம்தார். இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர்.

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மாற்றத்துக்கான தொடக்கம் இந்த வெற்றி

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர்

time to read

2 mins

November 04, 2025

Dinamani Thoothukudi

ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!

பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

time to read

2 mins

November 04, 2025

Dinamani Thoothukudi

எண்மக் கைதுக்கு எதிராக இரும்புக்கர நடவடிக்கை தேவை: உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் ரூ.3,000 கோடி மோசடி

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.

time to read

1 min

November 04, 2025

Dinamani Thoothukudi

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Thoothukudi

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Thoothukudi

வாரிசுகளின் கடமை

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

time to read

2 mins

November 03, 2025

Translate

Share

-
+

Change font size